இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும்? 

12 ராசி அன்பர்களுக்கும் இந்த வார (பிப்.22 - பிப்.28) ராசி பலன்களை தினமணி ஜோதிடர்
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும்? 

12 ராசி அன்பர்களுக்கும் இந்த வார (பிப்.22 - பிப்.28) ராசி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். மதிப்பு மரியாதை உயரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதர உறவில் சற்று விரிசல்கள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைப்பளு குறையும். இருப்பினும் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். 

வியாபாரிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். மறைமுகப் போட்டிகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கூட்டாளிகளால் தொல்லை ஏற்படலாம். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சிறப்பாக இருக்கும். கால்நடைகளால் லாபம் அடைவீர்கள். 

அரசியல்வாதிகள்  கவனமாக செயல்படவும். மக்களுக்கான உண்மையான போராட்டங்களில் மட்டுமே கலந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். கணவருடனான உறவு சீராகவே இருக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். வெளிவிஷயங்களில் ஆர்வத்தைக் குறைக்கவும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 23. 

சந்திராஷ்டமம்: 26, 27.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

மகிழ்ச்சிகரமான நேரமிது. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு சீராக இருந்தாலும் பொறுமையுடன்  உழைத்துச் சம்பாதிக்க வேண்டிய காலம் இது. வியாபாரிகள் கொள்
முதல் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவர். நண்பர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். விவசாயிகளுக்கு மகசூலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நீர்ப்பாசனத்தில் முன்னேற்றம் தென்படும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தை அனுசரித்துச் செல்லவும். பிறரிடம் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் அனுகூலமான திருப்பங்களைக் காண்பர். சிலர் பணவசதியும் விருது பெறும் வாய்ப்பும் பெறுவர். 

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும்.  வருங்காலக் கனவுகள் நிறைவேறும் அறிகுறிகள் தென்படும். 

பரிகாரம்: புதன் கிழமைகளில் பெருமாளை வழிவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 24. 

சந்திராஷ்டமம்: 28.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியைத் தரும். புதிய முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுக்க முனைவீர்கள்.  உடன்பிறந்தோர் வழியில் நிலவிய மனக்கசப்புகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள். 
வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.  விவசாயிகளுக்கு விளைச்சல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மாற்று பயிர் செய்து லாபம் பெறலாம். 

அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் இடைஞ்சல்கள் செய்வார்கள். எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். கணவரிடம் அன்புடன் நடந்துகொள்வீர்கள். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். படிப்பில் போதிய அக்கறை செலுத்தவும்.

பரிகாரம்: கணேசரை அருகம்புல் கொண்டு வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 24. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். மற்றவர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். 

உறவினர்களின் உதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவு தாமதமாகும். மேலதிகாரிகளிடம் இருந்த மனஸ்தாபம் குறையும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். வாடிக்கையாளர்களைக் கவரும் திட்டங்களைத் தீட்டி மகிழ்வீர்கள். விவசாயிகள் கடினமாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். சிலருக்கு வழக்குகளால் மனஉளைச்சல் உண்டாகும். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.  பலருடைய பாராட்டையும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பாராட்டும் விருதுகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களுக்கு சிறிது காலதாமதம் ஏற்படும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். மனதை ஒருமுகப்படுத்தும் கலையை கற்றுக் கொள்ளவும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் முருகரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பணவரவு தாராளமாக இருந்தாலும் சிறு விரயங்களும் ஏற்படும். மனதில் உள்ள கவலைகள் மற்ற வேலைகளில் இடையூறை ஏற்படுத்தலாம். ஆன்மிகச் சிந்தனைகள் உடலிலும் மனதிலும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திட்டமிட்டு முடிப்பீர்கள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சரளமாக முடியும். ஆனாலும் கவனமும் எச்சரிக்கையும் தேவை. விவசாயிகளுக்கு மகசூல் குறையும். விவசாய உபகரணங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை  அதிகரிக்கும். கடந்த காலங்களில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் ஒத்துழைப்புடனும் ரசிகர்களின் ஆதரவுடனும் திட்டங்களைச் செயல்படுத்தி புகழ் பெறுவார்கள். 

பெண்மணிகள் பணவரவு சீராக இருப்பதால் ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் படிப்பில் சற்று பின்தங்கிய நிலையில் இருப்பர்.  

பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தன்னம்பிக்கை குறையும் காலகட்டமிது. உடல்நலம் பாதிக்கப்படலாம். சகோதர வழியில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரிகளைத் தேடி அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள். வரவு செலவுகளை கவனத்துடன் பராமரிக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு இருக்கும். கடன்களையும் அடைப்பீர்கள்.  

அரசியல்வாதிகள் இந்த காலகட்டத்தில் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. மேலிடத்தின் அவமதிப்புகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தேடிவரும்.  ஆனாலும் திட்டமிட்ட வேலைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காது. 

பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தவாறு மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 22, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நினைத்தது எல்லாம் நன்மையாகவே நடக்கும். மற்றவர்கள் பாராட்டுவார்கள். பொருளாதார நிலையில் ஏற்றங்களைக் காண்பீர்கள். குடும்பத்தினர் ஆதரவுக்கரம்  நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பார்கள். வருமானமும் படிப்படியாக வளரும். மேலதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரிகள் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்வர். புதிய முதலீடுகளில் இறங்கி தொழிலை விருத்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து பன்மடங்கு லாபமீட்டுவார்கள். புதிய உபகரணங்களையும் கால்நடைகளையும் வாங்குவீர்கள். 

அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. எதையும் பலமுறை ஆலோசித்தப்பிறகே கவனமுடன் செயல்படுத்த வேண்டும். கலைத்
துறையினர் தொழிலில் கவனத்துடன் பணியாற்றினால் முன்னேற்றம் உண்டாகும்.  

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் பெற்றோர் மற்றும் சகோதரர்களால் பலன் அடைவார்கள்.  

பரிகாரம்: சக்கரத்தாழ்வார் சந்நிதியை வலம் வந்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 26.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வீண் அலைச்சல்கள் ஏற்படும். மதிப்பு மரியாதைக்கு குறைவு ஏற்படாது.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றமும் அபிவிருத்தியும் ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் மிகுந்த ஒத்துழைப்புடன் நடந்து கொள்ள வேண்டும். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்களின் பிரதிநிதிகள் பல இடங்களுக்குச் சென்று  விற்பனையை பெருக்குவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் பெயரும் புகழும் உயரும். மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றி நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். 

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். உறவினர்களிடம் மனம் திறந்து பேசவேண்டாம். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் ஆசிரியர்களின் ஆதரவு குறைவாக இருக்கும்.

பரிகாரம்: பெசன்ட் நகர் அராளகேசி அம்மனையும் ரத்னகிரீஸ்வரரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

அறிவும் ஆற்றலும் பளிச்சிடும். பொருளாதார நிலையில் மேம்பாடு ஏற்படும். எல்லாவழியிலும் வெற்றி தேடிவரும். பூர்வீக சொத்து விஷயமாக இருந்த தடங்கல்கள் நீங்கும். வழக்குகளில் வெற்றி உண்டு. உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையுடன் பழகவும். மேலதிகாரிகளின் சிறு உபத்ததிரவங்கள் இருப்பினும் பெரிய பாதிப்பு இல்லை. வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றமடைவர். தற்போது புதிய முதலீடு எதுவும் வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நிறைவாக இருக்கும். புதிய விளைநிலங்கள் வாங்கி வருங்காலத்தைச் செம்மையாக்க முனைவீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் கவனத்துடன் இருக்கவும். தொண்டர்களிடம் நல்லவிதமாகப் பழகி அவர்களின் உதவியை பெறவும். எதிர்கட்சியினர் வீண் அவதூறுகளை சுமத்த நினைப்பர். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் நற்பலனைப் பெற முடியும். 

பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அனைவரும் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். 

பரிகாரம்: அஷ்டதசபுஜ துர்க்கையை வணங்கி வரவும்.

அனுகூலமான தினங்கள்: 23,  27. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் பெயரும் புகழும் வளரும். உடல் ஆரோக்கியம் பலப்படும். மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். பிரச்னைகளில் தெளிவுகள் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து சந்தைகளில் பொருள்களை விற்பனை செய்வார்கள். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருக்கும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைக்கும். 

பெண்மணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சுபச்செலவுகளைச் செய்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நற்பலனை அடைவார்கள்.

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 27. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்களை முடித்து வெற்றியடைவீர்கள். தொழிலில் முட்டுக்கட்டை, தடைகள் விலகி நன்மைகள் உண்டாகும். வருமானத்திற்கு குறைவில்லை. பெற்றோர் வழியில் இருந்த குழப்பங்கள் நீங்கும். ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு கடன்கள் குறையும். நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்பர். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களால் நல்ல பலனை அடைவர். கால்நடைகள் மூலம் விவசாயத்தைப் பெருக்க இது சாதகமான காலகட்டமாகும். 

அரசியல்வாதிகளின் முயற்சியில் அனைத்தும் வெற்றி பெறும். இருப்பினும் தொண்டர்களிடம் எதிர்பார்த்த ஆதரவுகளைப் பெற முடியாது. கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்கு முடித்துக் கொடுத்து, புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.  பெண்மணிகளுக்கு கணவருடன் உறவு சீர்டும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். 

பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 25, 27.

சந்திராஷ்டமம்: 22.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

திட்டமிட்ட காரியங்களை வெகு சுலபமாக முடித்து விடுவீர்கள். சுபச் செலவுகள் ஏற்படும். வசதி வாய்ப்புகளும் பெருகும். உடலிலும் மனதிலும் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் உண்டாகும். உஷ்ணமாக வார்த்தைகளைத் தவிர்க்கவும்.  

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவர். விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அனைத்து தடைகளும் நீங்கும். லாபம் பெருகும். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடைகள் மூலமும் வருமானம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். அதில் திறமைகளை நன்றாக வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். 

பெண்மணிகள் தம் கணவருடன் நேசமாகப் பழகி, பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். மாணவமணிகள் தங்களின் விடாமுயற்சியால் வெற்றி பெற்று தாங்கள் விரும்பிய பிரிவுகளில் சேர்வார்கள்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 27,  28. 

சந்திராஷ்டமம்: 23,  24, 25.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com