நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்தாண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா வருகிற 29-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 8-ம் தேதி கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாரதனையும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல் ஆலுவர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.