நெல்லையப்பர் கோயிலில் ஆகஸ்ட் 29-ல் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் 

நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
நெல்லையப்பர் கோயிலில் ஆகஸ்ட் 29-ல் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் 


நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

அதன்படி இந்தாண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா வருகிற 29-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது. 

முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 8-ம் தேதி கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாரதனையும் நடைபெறும். 

இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல் ஆலுவர் உள்ளிட்டோர் செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com