இந்த வாரம் (ஆக.23 - 29) அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 23 - ஏப்ரல் 29) பலன்களை தினமணி ஜோதிடர்
இந்த வாரம் (ஆக.23 - 29) அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 23 - ஏப்ரல் 29) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். செயல்கள் வெற்றியுடன் முடியும். உடல்ஆரோக்கியம் சிறக்கும். மதிப்பு மரியாதை உயரும். தேவைக்கேற்ப உறவினர்கள் உதவுவார்கள். சகோதரி உறவில் சற்று விரிசல்கள் ஏற்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைச்சுமை குறையும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்
துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பர். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் ஆன்மிகத்தில் நாட்டம் கொள்ளவும். அதிகாலையிலேயே எழுந்து பாடங்களை மனப்பாடம் செய்வது நல்லது.

பரிகாரம்: விநாயகரை அருகம்புல் கொடுத்து வணங்கிவர நலன்கள் கூடும். 

அனுகூலமான தினங்கள்:  23, 24.

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். பணவரவுக்கும் குறைவு இராது. வீடு, வாகனம் மற்றும் தொழில் மாற்றத்திற்கு இது உகந்த காலமாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைச்சுமை அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற பாராட்டுகளை மேலதிகாரிகளிடம் பெறுவீர்கள். பணவரவுக்கும் குறைவு இராது. வியாபாரிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். மறைமுகப் போட்டிகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கூட்டாளிகளால் தொல்லைகள் ஏற்படலாம். மகசூல் நன்றாக இருப்பதால் கழனிகளை விரிவுபடுத்தும் எண்ணம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறும் நேரம். எனவே யாரையும் நம்பி விட வேண்டாம். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்கள் நட்பு பாராட்டுவார்கள். ரசிகர்களை அனுசரித்துச் செல்லவும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் படிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆசிரியரை அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: குருவாயூரப்பனை வணங்கி வர எண்ணங்கள் ஈடேறும். 

அனுகூலமான தினங்கள்:  24, 25. 

சந்திராஷ்டமம்:  இல்லை.  

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உடன்பிறந்தோர் வழியில் நிலவிய மனக்கசப்புகள் நீங்கும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அனைத்து இடையூறுகளையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். 

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு குறைவாகவே இருக்கும். பணவரவு சரளமாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். கலைத்துறையினரைத்தேடி புதிய வாய்ப்புகள் வரும். தொழிலில் போட்டி பொறாமைகள் விலகும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். வீண்வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 

பரிகாரம்:  பார்வதி} பரமேஸ்வரரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  23, 25.

சந்திராஷ்டமம்:  இல்லை.  

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சற்று தாமதமானாலும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். மற்றவர்களைச் சார்ந்து செயலாற்றிய நீங்கள், சுயமாக செயலாற்றும் காலமிது. தைரியத்துடன் திட்டமிட்டு பணியாற்றுவீர்கள். பண வசதியும் சரளமாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி ஏற்படும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் எந்தவொரு மாற்றமும் இல்லை. எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடும். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பார்கள். கடுமையாக உழைத்து எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். கால்நடைகளால் செலவுகள் ஏற்படும். 

அரசியல்வாதிகள் புகழின் ஏணியில் ஏறத் தொடங்குவார்கள். கட்சி மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றி நற்பெயர் எடுப்பார்கள். தொண்டர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். கலைத்துறையினரின் கனவுகளும் திட்டங்களும் பலிக்கும். பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். 

மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். 

பரிகாரம்: துர்க்கை வழிபாடு செய்யவும்; ராமபக்த அனுமனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 26. 

சந்திராஷ்டமம்:  இல்லை.  

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும்  முடிவு  நீங்கள் எதிர்பார்த்தபடியே அமையும். எல்லா செயல்களையும் உங்களை சார்ந்தவர்களுக்கும் சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே செய்து முடித்து பிரச்னைகளைத் தவிர்க்கவும்.  உழைப்புக் கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். கூடுதல் விழிப்புணர்வு தேவை. விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  

அரசியல்வாதிகள் எதிரிகளின் தந்திரங்களை எச்சரிக்கையுடன் கவனித்து வரவும். திட்டமிட்ட வேலைகளில் முன்கூட்டியே யோசித்து செயல்படவும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளின் எண்ணிக்கை குறையும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது. 

பெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். வீண் யோசனைகள் உங்கள் வலிமையை குறைக்கும். மாணவமணிகள் செய்யாத குற்றத்திற்காக ஆசிரியரிடம் தண்டனை வாங்கி நேரிடும்.

பரிகாரம்:  செந்திலாண்டவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  25, 27. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை சிறிது குறையும். மனோபலத்தைப் பெருக்கிக் கொள்ளவும். பிறருக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிது ஈடுபாடு குறையும். எனினும் வேலைகளை நன்றாகவே செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் குறைந்த முதலீட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி, வருமானம் பெருகும். சிலருக்கு பால் வியாபாரம் சிறப்பாக நடக்கும். 

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவர நினைக்க வேண்டாம். தற்சமயம் உள்ள நிலைமையை பயன்படுத்தி கட்சி மேலிடத்தில் நற்பெயர் எடுக்கவும். 

கலைத்துறையினருக்கு பல நாள்களாகத் தடைப்பட்டு வந்த செயல்கள் வெற்றியுடன் முடிவடையும்.  பெண்மணிகள் சேமிப்பை எடுத்து செலவு செய்ய நேரிடலாம். கணவருடனான ஒற்றுமையும் சுமாராகவே இருக்கும். மாணவமணிகள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

பரிகாரம்:  சனியன்று சனீஸ்வரரை தீபமேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  25, 26. 

சந்திராஷ்டமம்:  இல்லை.  

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதாரத்தில் சிறிது குறைவு இருந்தாலும் முக்கியமான தேவைகள் பூர்த்தியாகும். பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அலுவலக வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் நடந்தேறி விடும். வியாபாரிகள் நல்ல லாபம் காண்பார்கள். சாதுர்யத்துடன் செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகள் மூலம் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். உங்கள் திறமையை மற்றவர்கள் பாராட்டுவார்கள்.

பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். விடியற்காலையில் எழுந்து பாடங்களைப் படிப்பதால் சிறப்பான மதிப்பெண்கள் கிடைக்கும்.

பரிகாரம்:  வெள்ளியன்று அம்பாளை நெய் தீபமேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  26, 27.

சந்திராஷ்டமம்:  23, 24, 25.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதார நிலைமை மேம்படும். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்கள் செயல்களை மாற்றியமைத்து வெற்றியடைவீர்கள். தீயோர் சேர்க்கையை தவிர்க்கவும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை சீராகவே காணப்படும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகள் அனைத்தையும் கவனத்துடன் செய்து முடிக்கவும். மேலதிகாரிகள் சற்று கடுமையாகவே நடந்து கொள்வார்கள். 
வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் சில அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.  

அரசியல்வாதிகள் மீது வீண் பழி விழும். தொண்டர்களை அரவணைத்துச் செல்வது நல்லது. உட்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினருக்கு திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்கள் சாதகமாக இருப்பார்கள். 

பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக காணப்படும். பேச்சில் கவனம் வைப்பது நல்லது. கணவருடன் சுமுகமாக இருப்பது நல்லது. மாணவமணிகள் பெற்றோர் சொல்கேட்டு நடந்தால் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை சஷ்டி கவசம் படித்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்:  24, 28. 

சந்திராஷ்டமம்:  26, 27.  

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்களின் எண்ணங்கள் செயல்வடிவம் பெறுவதில் சற்று நிதானம் தேவை. ரகசியங்களை அறிவீர்கள். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். உடல் ஆரோக்கியம் பலப்படும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிரமங்கள் குறையும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். சிரமங்களுக்கு நண்பர்களும் உதவுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். வர்த்தகர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள். 

அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்கள் பொதுச்சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு குதூகலமான காலமாகும். புதிய திறமைகள் அரங்கேறும். பணவரவும் கூடும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அந்தஸ்து உயரும். கணவருடனான ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மாணவமணிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கோரிக்கைகள் பெற்றோர் நிறைவேற்றுவார்கள்.

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமி தினத்தில் காலபைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  24, 26. சந்திராஷ்டமம்:  28, 29.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் அறிவும் ஆற்றலும் பளிச்சிடும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முடித்து வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்து விஷயமாக இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் வெற்றிவாகை சூடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். புதிய சந்தைகளில் வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகள் மூலம் நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். 

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். எதிரிகளின் மூலம் இருந்த வந்த சங்கடங்கள் குறையும். செயல்களை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் நற்பலன் அடைய முடியும். முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். 

பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். 

மாணவமணிகளுக்கு பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். 

பரிகாரம்: வியாழனன்று ராமபக்த அனுமனை வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 28.

சந்திராஷ்டமம்:  இல்லை.  

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

அளவுக்கு மீறின யோசனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தொழில் தொடர்பான பயணங்கள் நலம் தரும். செயல்களில் முக்கியத் திருப்பங்களைக் காண்பீர்கள். வீட்டிற்குத் தேவையான உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைச் சரிவர புரிந்து கொண்டு கச்சிதமாக முடிக்கவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு  இருப்பதால் செயல்கள் பிரச்னையின்றி முடியும். வியாபாரிகளுக்கு கடன்கள் குறையும். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும். கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த வருமானம் பெறுவர். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் செல்வாக்கு உயரும். செயல்கள் சாதனையாக மாறும். நண்பர்கள்போல் பழகும் எதிரிகளிடம் உஷாராக இருக்கவும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். அவநம்பிக்கைகள் நீங்கும். ரசிகர்களின் ஆதரவும் இருக்கும்.

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். கோரிக்கைகள் நிறைவேறும்.  மாணவமணிகளுக்கு மதிப்பெண்கள் குறையும். முயற்சிகளை கைவிடாது அதிகாலையில் எழுந்து படிக்கவும்.

பரிகாரம்: வெள்ளியன்று பெருமாள் தாயாரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  27, 28. 

சந்திராஷ்டமம்:  இல்லை.  

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் காரியங்களில் இருந்து வந்த முட்டுக் கட்டைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் கூடும். எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு இருந்தாலும் சமாளிப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எல்லா தடைகளும் நீங்கும். லாபம் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி லாபத்தைப் பெருக்குவார்கள். கால்நடை பராமரிப்புச் செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளில் அலைச்சல் இருந்தாலும் சாதகமாகவே முடியும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடனான உறவு சீர்படும். தெய்வ பலத்தைப் பெருக்கிக் கொண்டால் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். மாணவமணிகள் வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வார்கள். ஆதலால் எதிலும் மிகவும் கவனத்துடன்இருப்பதே நல்லது.

பரிகாரம்:  ஞாயிறன்று சூரியநமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி கூடப் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்:  28, 29. 

சந்திராஷ்டமம்:  இல்லை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com