கடன் வாங்கியாவது வீடு கட்டுவார்களாம் இந்த ராசிக்காரர்கள்!

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த விகாரி ஆண்டு ஏற்றம் தரக்கூடிய ஆண்டாகவே அமைந்துள்ளது.
கடன் வாங்கியாவது வீடு கட்டுவார்களாம் இந்த ராசிக்காரர்கள்!

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த விகாரி ஆண்டு ஏற்றம் தரக்கூடிய ஆண்டாகவே அமைந்துள்ளது. முக்கியமாக வீடு கட்டும் யோகம் பலமாக அமைந்திருந்தாலும்,  அவரவர் தசாபுத்தி அடிப்படையில் இது அமையக்கூடும். 

புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பலமான ஓர் அஸ்திவாரம் ஏற்பட்டுவிடும். தற்காலிக வாய்ப்புகள் நிரந்தரமாகிவிடும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உடன்பிறந்தோரும் அனுசரித்து நடந்துகொள்வார்கள்.

பொருளாதார நிலைமை உயர்ந்து காணப்படும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் சேர்வார்கள். சிலர் தம் வசமுள்ள விலையுயர்ந்த பொருள்களை விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு புதிய நிலம், வீடு வாங்கவும் வாய்ப்புண்டாகும். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயமும் அனுகூலமும் வந்து சேரும்.

கடந்த காலத்தில் உழைப்புக்குக் கிடைக்காத மதிப்பும் வசதியும் இந்த காலத்தில் உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சகஜமான நிலை உண்டாகும். திருமண வயதைத் தாண்டியும் திருமணமாகாமல் தடுமாறிக் கொண்டிருந்தவர்களுக்குத் திருமணப் பிராப்தம் கூடி வரும்.

எதிரிகளின் தொல்லைகளுக்கு ஆட்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து மீண்டு வருவார்கள். தொடர்ந்த உடலுபாதைகளால் மனச்சஞ்சலம் அடைந்திருந்தவர்கள் முழுமையாகத் தேக ஆரோக்கியத்தைப் பெற்று மகிழ்ச்சியடைவார்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தாலும் அவர்களைத் திருப்திப்படுத்த முடியாமல் போகும் காலகட்டமாக இது அமைகிறது.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் வர்த்தகம் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணமுடை என்கிற பேச்சுக்கே இடமிராது. தீவிர முயற்சியின் பேரில் புதிய கடன் பெற்று புது வீடு கட்டவும் சந்தர்ப்பம் உள்ளது. வெளியிலிருந்து வரவேண்டிய பணமும் கைவந்து சேரும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து அவர்களின் சிபாரிசின் பேரில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முன்னதாகவே அறிந்து அதற்கான தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். புகழ், கீர்த்தி, செல்வாக்கு, கௌரவம் யாவும் மேன்மேலும் அதிகரிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாகவே முடிவடையும். உடலில் இருந்த சோர்வுகள் நீங்கி உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். உங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். இதனால் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணவரவும் நன்றாக இருக்கும். காலநேரங்களை வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளவும். வியாபாரிகளுக்குச் சற்று கூடுதலான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் அதிகமான லாபங்களைக் காண்பீர்கள்.

சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். பழையக் கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். கூட்டாளிகளிடமும் நண்பர்களிடமும் கலந்தாலோசித்தபிறகே அனைத்து செயல்களையும் நிறைவேற்றவும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். விளைச்சல் நன்றாக இருக்கும்.

இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துவீர்கள். புதிய முயற்சிகளில் துணிந்து ஈடுபடலாம். கால்நடைகளாலும் நல்ல பலன் கிடைக்கும். பாசனம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவும். குத்தகை வருவாயும் தானிய விற்பனையும் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்குப் பெயரும் புகழும் அதிகரிக்கும். தொண்டர்களை உற்சாகப்படுத்துவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும்.

அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவு மழையில் நனைவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். உற்றார் உறவினர்கள் உங்கள் பேச்சைக் குறை கூறுவார்கள்.

குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவமணிகள் நீண்ட கால திட்டங்கள் தீட்ட இது உகந்த நேரம். கிரிக்கெட் போன்ற வெளி விளையாட்டுகளில் ஈடுபடலாம். நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். போதிய பயிற்சிகளை மேற்கொண்டு நிறைய மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்

மிதுன ராசிக்காரர்கள் பார்வதி, பரமேஸ்வரரை வழிபடவும். மேலும், பிரதோஷ காலங்களில் ரிஷபாரூடரை தரிசிக்க நல்ல பலன் கிடைக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com