வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2ஆம் நாளான வியாழக்கிழமை, தங்கத் தேரில் வலம் வந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி.
வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2ஆம் நாளான வியாழக்கிழமை, தங்கத் தேரில் வலம் வந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி.

வருடாந்திர வசந்தோற்சவம்: தங்கத் தேரில் உற்சவர்கள் வலம்

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை, தங்கத் தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத


திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை, தங்கத் தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
திருமலையில் ஆண்டுதோறும் கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்க வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி புதன்கிழமை வசந்தோற்சவம் தொடங்கியது. அதன் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி தங்கத் தேரில் மாட வீதியில் வலம் வந்தார். தங்கத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 
அதன்பின் மதியம் 2 மணிக்கு உற்சவர்களுக்கு கோயில் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள வசந்த மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி மற்றும் வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாள் என ஓராண்டுக்கு 3 முறை மட்டுமே தங்கத் தேர் புறப்பாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com