பிரத்யங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்

ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் உள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி வியாழக்கிழமை நள்ளிரவு மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.
பிரத்யங்கிரா தேவி கோயிலில் நடைபெற்ற நிகும்பலா யாகம்.
பிரத்யங்கிரா தேவி கோயிலில் நடைபெற்ற நிகும்பலா யாகம்.


ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் உள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி வியாழக்கிழமை நள்ளிரவு மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.
கோயில் பீடாதிபதி பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில், இரவு 7 மணியளவில் கணபதி ஹோமத்துடன் மகா யாகம் தொடங்கியது.
 தொடர்ந்து, மகா சுதர்சன யாகம், சண்டி யாகம், வாராஹி யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் உலக நன்மை மற்றும் மழை வேண்டி மிளகாய் வற்றல், வெண்கடுகு, பட்டு வஸ்திரம் மற்றும் பூஜைப் பொருட்களை யாகத்தில் இட்டு மகா நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது.
பின்னர் கலசப் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பிரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த வழிபாட்டில், ராணிப்பேட்டை சுற்று வட்டாரம் மட்டுமன்றி, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com