ஆத்தூர் வேதாஸ்ரமத்தின் 7-வது ஆண்டு விழா

செங்கல்பட்டு, காஞ்சி சாலையில் ஆத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சதுர்வேத வித்யா கணபதி..
ஆத்தூர் வேதாஸ்ரமத்தின் 7-வது ஆண்டு விழா

செங்கல்பட்டு, காஞ்சி சாலையில் ஆத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சதுர்வேத வித்யா கணபதி வேதாஸ்ரமத்தில், ஏப்ரல் 7 (நாளை) ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீ சதுர்வேத வித்யா கணபதி ஸ்வாமிக்கு ஸம்வத்ஸர அபிஷேகமும், வேதாஸ்ரமத்தின் 7-ம் ஆண்டு விழாவும் நடைபெறுகின்றன.

இந்நிகழ்ச்சி காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் சேங்காலிபுரம் ஸ்ரீ சுந்தரராம தீக்ஷிதரும், குருகீர்த்தி பிராசாரமணி பி.சுவாமிநாதனும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இங்கு வேதம் பயின்று குருகுல வாசம் பூர்த்திசெய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களை அளிக்கின்றனர். 

இந்நிகழ்ச்சியில், பாடசாலை மாணவர்கள் பங்கேற்று நடத்தும் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் நாடகங்கள் இடம்பெற்றுள்ளது. இவ்விழாவில் பங்கேற்று வேதாஸ்ரமத்தின் வளர்ச்சியில் பங்குகொள்ளுமாறு இதன் நிறுவனர் காமகோடி அவர்கள் கேட்டுக்கொள்கிறார். 

மேலும் தொடர்புக்கு - 9884402624, 9444051018

website: www.athurvedapatasala.com

Mail: SCVGtrust@gmail.com

- எஸ்.வெங்கட்ராமன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com