ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019: தனுசு, மகரம், கும்பம், மீனம்

2019-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை ஜோதிட வாசஸ்பதி சுந்தரராஜன் (தனுசு, மகரம், கும்பம், மீனம்)..
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019: தனுசு, மகரம், கும்பம், மீனம்

2019-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை ஜோதிட வாசஸ்பதி A சுந்தரராஜன் (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஆகிய ராசிக்கான பலன்களை நமக்குத் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். 

தனுசு (மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

குருவை அதிபதியாகக் கொண்டு முகத்தில் அமைதியும், தேஜஸும், நியாயம் நேர்மைபக்கம் நின்று பாரபட்சம் இன்றி முகத்தில் அடித்தார்போல் பேசும் தனுசு ராசி/லக்ன அன்பர்களே! 

உங்கள் ராசியிலேயே சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் இந்த 2019-ம் வருடம் உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். வருடம் பிறக்கும்போது  சூரியன் உங்கள் ஜென்ம ஸ்தானத்திலும் குரு விரைய ஸ்தானத்திலும் ராகு உங்கள் ராசியின் 8-ம் வீட்டிலும் கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. ஏழரை சனியின் தாக்கத்தால் செய்யும் முயற்சிகளில் தடை மற்றும் தாமதம் நிறைந்ததாக இருக்கும். உங்கள், பேச்சில் கவனம் தேவை. தேவையான நேரத்தில் பேசாமல் இருப்பதும் பிரச்னையை பெரிதாக்கிவிடும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். உங்கள் ஆரோக்கியத்திலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவேண்டும். 

மார்ச் மாதம் வரை உங்கள் குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் கேது உங்கள் ஜென்ம ஸ்தானத்திற்கும் எட்டாமிடத்தில் இருக்கும் ராகு களத்திர ஸ்தானத்திற்கும் இடம் மாறுவது உங்கள் பிரச்னைகளை இந்த வருடம் நாட்கள் நகர நகர அதிகமாக்கக்கூடும். தொழில் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகள் அதிகரிக்கும். நவம்பர் மாதம் வரை உங்கள் ராசி நாதனும் 4ம் வீட்டதிபதியுமான குரு 12ல் மற்றும் கால புருஷ ராசிக்கு எட்டில் மறைவதால் உடல் ஆரோக்கியம், தாயாரின் உடல் நிலை, வீடு வாகனங்கள் போன்ற விஷயங்களால் பண விரயம் ஏற்படும். உங்கள் ராசியில் நிற்கும் சனி பகவான் உங்கள் 3,5,7,9,10 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் பிரச்னைகள் பல ரூபங்களில் வந்துகொண்டே இருக்கும். 

முக்கிய கிரகங்களான குரு, சனி, ராகு, கேது அனைத்தும் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால் நீங்கள் இந்த 2019 வருடம் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள். தொழில் மற்றும் வேலையில் வேலைச்சுமை அதிகரிக்கும். இன்னும் ஒரு வருடத்திற்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற எதையும் எதிர்பார்க்காமல் வேலையில் இருந்தாலே போதும் என்ற மன உணர்வுடன் கவனத்துடன் பணிபுரிவது அடுத்து வரும் நாட்களில் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். கடன் அதிகரிப்பதும் உங்கள் உடல் நலத்தைப் பாதிக்கக்கூடும். நீங்கள் பயணம் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின் எந்த முடிவும் எடுப்பது நல்லது.

நவம்பர் மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசியில் ஆட்சி பலத்துடன் சஞ்சாரம் செய்வதால் மனதில் உற்சாகம் பிறக்கும். குரு சனி சேர்க்கை வேளையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குருவின் பார்வை உங்கள் 5, 7 மற்றும் 9 வீடுகளுக்கு ஏற்படுவதால் பிள்ளைகளாலும் வாழ்க்கைத் துணையாலும் தந்தையாலும் அனுகூலம் மற்றும் சந்தோஷம் ஏற்படும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நவம்பர் மாதத்திற்கு மேல் சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

பரிகாரம்: இந்த ஆண்டில் உங்கள் வாழ்வில் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்க நீங்கள் திருச்செந்தூர் முருகனையும், தென்குடி திட்டை குருபகவானையும் வணங்கி வருவதும் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு வியாழக்கிழமைகளில் சென்று வருவதும் வாழ்வில் வளம் சேர்க்கும்.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

சனைச்சர பகவானை அதிபதியாகக் கொண்டு கடின உழைப்பாளர்களாகவும், சம்பாதிக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகவும் சிக்கனம் நிறைந்தவர்களாகவும் விளங்கும் மகர ராசி/லக்ன அன்பர்களே! இந்த 2019 ஆண்டில் ஆரம்பத்தில் உங்கள் ராசியில் கேதுவும், 7ம் வீட்டில் ராகுவும் நின்று உங்கள் ராசி நாதன் சனி 12-ல் மறைந்து இருப்பதால் எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மை மற்றும் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். அடிக்கடி ஏதோ ஒரு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு சரும வியாதிகள் அதிக தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும். மனதில் விரக்தி நிலையும் நிலவும். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிலும் செவ்வாய் 3ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் இந்த வருடத் தொடக்கத்தில் ஓரளவு மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். பணக்கஷ்டம் என்பது இருக்காது.

மார்ச் மாதத்தில் உங்கள் ராசியில் இருந்து கேது பகவான் உங்கள் 12ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது, உங்கள் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்து வந்த ராகு பகவான் உங்கள் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். கடன் கட்டுக்குள் நிற்கும். சத்ருக்கள் விலகுவர். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கும், கேது 12ஆம் வீட்டிற்கும் இடம் மாறுவது, உங்கள் வளர்ச்சியையும் வெற்றியையும் அதிகப்படுத்தும். சனி பகவான் பல தடைகளை உருவாக்கினாலும், குரு அந்த பிரச்னைகளுக்கு தீர்வு பெற உதவுவார். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதிநிலை குருவின் பலத்தால் சிறப்பாக இருக்கும். ஏழரை சனியின் தாக்கம் செப்டம்பர் 2019 வரை இருக்காது. மனசஞ்சலங்கள் நீங்கி நிம்மதி அடைவர். வெளிநாட்டு வாய்ப்பு ஒரு சிலருக்கு தேடிவரும். உங்கள் ராசிநாதன் கேதுவின் சேர்க்கை பெற்று விளங்குவது சிறப்பல்ல. குரு பகவானின் பார்வை உங்கள் 3, 5, 7 ஆகிய வீடுகளின் மேல் படுவதால் சகோதர சகோதரிகளினால் நன்மை மற்றும் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவி உறவில் சந்தோஷம் நிலவும். குழந்தை பாக்கியம் வேண்டி இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கு பின் திருமணம் கைகூடும். 

அக்டோபர் மாதத்திற்கு மேல் குருவும் உங்கள் 12ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் ஒரு சிலருக்கு ஆன்மீக பயணங்கள் செல்லும் வாய்ப்பு ஏற்படும். திருமணம் போன்ற சுப செலவுகள் ஏற்படும். குரு பார்வையால், ஆரோக்கியம் கூடும் தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர் பாராத திடீர் வருமானங்கள் அதிகரிக்கும். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் குடும்பத்தினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் உத்தியோகம், நிதிநிலை மற்றும் குடும்ப சூழலில் நாங்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள். முக்கிய கிரஹங்களான குரு, சனி, ராகு, கேது உங்கள் 12 வீட்டில் இணைவு பெறுவதால் மருத்துவ செலவு, வெளிநாட்டு வாய்ப்பு போன்றவை ஏற்படும்போது சுய ஜாதக பலத்தையும் ஆய்ந்து செயல்படவும். 

பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் இன்னல்கள் நீங்கி வாழ்வில் வசந்தங்கள் வீச நீங்கள் ஸ்ரீ தர்ம சாஸ்தாவான ஐயப்பனை வணங்கி வர அவன் அருளால் துன்பங்கள் தொலைந்து மகிழ்ச்சி பெருகும்.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

சனைச்சர பகவானை அதிபதியாகக் கொண்டு கடின உழைப்பாளர்களாகவும் அதிக சிக்கனத்தை கடைப்பிடிப்பவர்களாகவும், மிகவும் அழுத்தமானவர்களாகவும் பல ரகசியங்களை எப்போது தன்னுள் வைத்துக்கொண்டு அதனால் எப்போதும் அவஸ்தை படுபவர்களாகவும் திகழும் கும்ப ராசி/லக்ன அன்பர்களே! உங்கள் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே ரகசியங்களைப் பாதுகாப்பதுதான். 

இந்த 2019ம் வருட ஆரம்பத்தில் ராகு உங்கள் ஆறாம் வீட்டிலும் கேது 12-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் உங்கள் ராசிநாதன் சனி 11ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்புதான். இந்த வருடம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். குரு உங்கள் ராசியின் 1௦-ம் வீட்டில் சஞ்சரித்து நல்ல நிலையில் இல்லை என்றாலும், சனி பகவான் சிறப்பான நிலையில் உங்கள் ராசியின் 11-ம் வீட்டில் சஞ்சரிக்கின்றார். வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. இதனால் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். நவம்பர் மாதம் வரை குருவின் பார்வையின்றி ராகு/கேதுவின் பார்வை உங்கள் களத்திர ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து மோதல்கள் ஏற்படும். உங்கள் துணைவரை அனுசரித்துச் செல்வது அவசியம். 

குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் அக்டோபர் 2018 வரை சஞ்சரித்து சில பிரச்னைகளை மேல் நிர்வாகத்தால் உங்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருப்பார். அரசியல் பிரச்னைகளையும் நீங்கள் சந்தித்திருந்திருப்பீர்கள். மற்றபடி உங்களுக்கு வேறு எந்த பாதிப்புகளும் இருந்திருக்காது. குரு தற்போது உங்கள் ராசியின் 11-ம் வீட்டில் சஞ்சரித்து ஏப்ரல், நவம்பர் மற்றும் டிசம்பர் 2019 மாதங்களில் உங்களுக்கு பல நல்ல பலன்களைத் தருவார். தனலாபம், குடும்பத்தில் ஒற்றுமை, வீடு வாங்கும் அமைப்பு, சுகம், நோயிலிருந்து விடுதலை, நீண்ட நாள் கடன் அடைத்தல் போன்ற நன்மைகள் ஏற்படும்.

உங்களது நீண்டகால கனவுகள் நனவாகும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்வீர்கள். வழக்குகள் ஏதேனும் இருந்தால், அதில் இருந்து இந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் சாதகமான தீர்ப்போடு வெளி வருவீர்கள். இந்த 2019-ம் வருடம் உங்களுக்குப் பல நல்ல பலன்களை தரும். குழந்தை பாக்கியம், கணவன் மனைவி உறவு மேம்படுதல், தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் ஆகிய மேன்மைகள் ஏற்படும். எனினும் எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுப்பதாயினும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் செயல்படுவது நல்லது. இந்த 2019-ம் வருடம் நீங்கள் பல வெற்றிகளைக் காண்பீர்கள். இந்த வருடம் நீங்கள் உங்கள் குடும்ப ஒற்றுமை மேம்படவும், 

பரிகாரம்: வாழ்வில் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகவும் நீங்கள் இந்த ஆண்டு முழுவதும் முடிந்தபோதெல்லாம் கும்பகோணம் நாச்சியார்கோயில் அருகில் இருக்கும் குடும்ப சனி கோயிலுக்கு சென்று வருவதும் மற்றும் சனைச்சரனின் குருவான கால பைரவரை ராகு கால நேரத்தில் வழிபடுவதால், உங்கள் குடும்பம், தொழில், ஆரோக்கியம் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகள் குறைந்து நன்மை ஏற்பட உதவும்.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குரு பகவானை அதிபதியாகக் கொண்டு கள்ளம் கபடம் இன்றி எதையும் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படும் மீன ராசி/லக்ன அன்பர்களே! 

இந்த 2019-ம் வருட ஆரம்பத்தில் உங்கள் ராசி நாதன் மற்றும் குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் இந்த புது வருடம் உங்களுக்கு நல்ல பலன்களோடு தொடங்கும். குரு உங்கள் ராசியின் 9-ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேலும் உயருவீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்வீர்கள். மேலும் நல்ல உறவுகளை வளர்ப்பீர்கள். உங்களுக்கு ஏதாவது சட்ட பிரச்னைகள் இருந்தால் அதில் இருந்து நல்ல சாதகமான தீர்ப்போடு அல்லது ஒரு தொகை செட்டில்மென்ட்டோடு வெளி வருவீர்கள்.

எந்த உடல் உபாதைகளும் இருக்காது. நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள். உங்களது நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரத்து அதிகரிக்கும். குருவின் பார்வையால் வரவுக்கு ஏற்றச் செலவு, சகோதரர்களால் அனுகூலம், குழந்தை பாக்கியம், தந்தை வழி சொத்துக்கள் கிடைத்தல், ஷேர் மார்கெட் மூலம் ஆதாயம் போன்ற அனுகூலமான பலன்கள் ஏற்படும். 

இந்த வருடம் முழுவதும் சனைச்சர பகவான் உங்கள் தொழில் மற்றும் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார், மார்ச் மாதம் வரை உங்கள் 11ம் வீட்டில் பயணம் செய்த கேது பகவான் உங்கள் 10ம் வீட்டில் சனியோடு இணைவு பெறுவதால் வேலை மற்றும் தொழிலில் நவம்பர் வரை சற்று இழுபறி நிலைதான் நிலவும். என்றாலும் கெமிக்கல், மருத்துவம் தொடர்புடைய தொழில்களைச் செய்பவர்களுக்கு அவ்வளவு பாதிப்புகள் இருக்காது. ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை/தொழில் வாய்ப்புகள், ஆன்மீக பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிட்டும். 

நவம்பர் மாதத்தில் குரு பகவான் உங்கள் 10ம் வீட்டிற்குப் பிரவேசம் செய்கிறார். பொதுவாக 10-ல் குரு இருந்தால் பதவி பறிபோகும் எனக் கூறுவார். ஆனால் உண்மையில் குரு தான் இருக்கும் வீட்டின் பலனை பெருக்குவார். எனவே பலவிதமான வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்பதுதான் உண்மை. மேலும் கர்ம காரக சனியும் தன காரக குருவும் உங்கள் 10ம் வீட்டில் ஆட்சி பலத்தோடு இணைவுப் பெறுவதால் உங்கள் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவுகள் நீங்கும். பணம் பல வகைகளில் வரும். 

மொத்தத்தில் நீங்கள் உங்களது நீண்ட கால சோதனை காலத்தை முடித்து விட்டீர்கள். இந்த 2019ஆம் வருடம் மற்றும் வரவிருக்கும் அடுத்த இரண்டு வருடங்கள் உங்களுக்கு சிறப்பான பலன்களோடு இருக்கக்கூடிய ஒரு நீண்ட காலமாக இருக்கும். நேர்மறை மாற்றங்களோடு மகிழ்ச்சியான நேரம் இது. முக்கியகாக தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம், வீடு வாங்கும் அமைப்பு, கடன் சுமை குறைதல், நோய் நீங்கி ஆரோக்கியம், கணவன் மனைவி உறவுகளில் பிரச்னை, தொழில் மற்றும் வியாபாரம் மேம்படுதல் ஆகிய அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

இந்த வருடத்தில் நீங்கள் நாகலாபுரம் வேதநாராயண பெருமாளையும், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரையும் வணங்கிவர ஆதவனைக் கண்ட பனிபோல உங்கள் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com