ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

2019-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை ஜோதிட சுந்தரராஜன் (கன்னி, சிம்மம், துலாம், விருச்சிகம்) ஆகிய..


2019-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை ஜோதிட வாசஸ்பதி A சுந்தரராஜன் (கன்னி, சிம்மம், துலாம், விருச்சிகம்) ஆகிய ராசிக்கான பலன்களை நமக்குத் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். 

சிம்மம் (மகம், பூரம் உத்திரம் 1-ம் பாதம் முடிய)

சூரியனை அதிபதியாகக் கொண்டு சூரியனைப் போல் சுயநலம் பார்க்காமல் பொதுநலனுக்காக பாடுபடும் சிம்ம ராசி/லக்ன அன்பர்களே! உங்களை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக கம்பீரமாகவும் அதிகார தோரணையோடும் இருக்க விரும்புவது உங்கள் இயல்பு. 

இந்த 2019-ம் வருடத்தின் ஆரம்பத்தில் குருபகவான் உங்கள் நான்காம் வீட்டிலும் வருட இறுதியில் உங்கள் 5-ம் வீட்டிலும் சிறப்பான நிலையில் சஞ்சரிப்பார். எனவே இந்த ஆண்டில் நன்மையும் தீமையும் கலந்த சம அளவிலான பலன்கள் ஏற்படும். சனி பகவான் உங்கள் ராசியின் 5-ம் வீட்டில் தொடர்ந்து சஞ்சரித்து உங்கள் குடும்பத்தில் பல பிரச்னைகளை தரக்கூடும். 

பொதுவாகவே சிம்ம ராசியினருக்கு ஏழாம் வீடு சனியின் வீடாக இருப்பதால் திருமண வாழ்க்கை என்பது திருப்தியற்ற ஒன்றாகவே இருக்கும். அதிலும் இந்த வருடத்தில் உங்கள் ஏழாம் வீட்டிற்கு சனியின் பார்வையும் சேர்வதால் கணவன்/மனைவி உறவு பாதிக்காத வகையில் நடப்பது நல்லது. ராகு உங்கள் ராசியின் 11-ம் வீடான லாப ஸ்தானத்திற்கு மார்ச் 2019 முதல் இடம் மாறுவது சிறப்பாக உள்ளது. கடந்த வருடத்தை விட இந்த 2019-ம் வருடம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். 

உங்கள் உத்தியோகம், நிதி நிலை மற்றும் முதலீடுகள் நல்ல நிலையில் இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்குப் பெரிய அளவில் கடன்கள் கொடுக்கக்கூடாது. தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். நவம்பர் மாதம் வரை உங்கள் ராசியின் 4ம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் தொழில் மற்றும் ஜீவன ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டிய ப்ரொமோஷன் மற்றும் சம்பள உயர்வு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் கிடைத்துவிடும்.

வெளிநாடு சென்றிருக்கும் அன்பர்கள் மார்ச் மாதத்திற்கு மேல் தங்கள் நாட்டிற்கே வந்துவிடும் சூழ்நிலை ஏற்படும். மேலும் அதிகாரம் மற்றும் கௌரவ பாதிப்பு, குழந்தைகளால் மனசஞ்சலம், கணவன் - மனைவி ஒற்றுமை குறைவு, வேலையில் பிரச்னைகள் போன்றவை ஏற்படும். நவம்பர் மாதத்தில் குரு தனுர் ராசிக்கு பெயர்ந்தவுடன் உங்கள் ராசி மற்றும் லக்னத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் பல அனுகூலமான விஷயங்களை எதிர்பார்க்கலாம். முக்கியமாக ஆன்மீக பயணங்கள், தன்னம்பிக்கை, தெளிவு, கௌரவம் மேம்படுதல், எதிர்பாராத வருமானங்கள் ஏற்படும். மேலும் அரசியலில் வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் அன்பர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு அனுகூலமான செய்திகள் வந்தடையும்.

இந்த ஆண்டில் முக்கிய கிரஹங்களான குரு, சனி, ராகு, கேது சேர்க்கை உங்கள் 5ம் வீட்டில் ஏற்படுவதால் குழந்தைகள் விஷயத்திலும் ஷேர் மார்க்கெட் முதலீடு போன்ற விஷயங்களிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. மொத்தத்தில் இந்த வருடம் ஆரம்பத்தில் பல அனுகூலமற்ற விஷயங்களைத் தந்தாலும் வருட முடிவில் உங்கள் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வேற்படும் விதமாக இந்த ஆண்டு இருக்கும். 

பரிகாரம்: இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் குல தெய்வத்தையும் சிவ பெருமானையும் வணங்கி வர உங்கள் வாழ்வில் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். 

{pagination-pagination}

கன்னி: (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

புதனை அதிபதியாகக் கொண்டு இளமையும், பெண்மையும், மென்மையும் பழகுவதிற்கினிமையும் புத்திசாலித்தனமும் கொண்டு விளங்கும் கன்னி ராசி/லக்ன அன்பர்களே! இந்த 2019 புது வருடம் உங்களுக்கு சற்று சோதனைகளோடும், ஏமாற்றங்களோடும் தொடங்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 4-ம் வீட்டில், குரு 3-ம் வீட்டில் மற்றும் கேது 5-ம் வெட்டில் சஞ்சரிப்பது இந்த வருடத்தின் தொடக்கத்தில் கசப்பான அனுபவங்களை உங்களுக்குத் தரக்கூடும். அர்தாஷ்டம சனியும் ராசி/லக்னத்திற்கு சனியின் பார்வையும் இந்த வருடம் உங்கள் செயல்கள் யாவும் சற்று மந்தகதியிலேயே நடைபெறும். மறதி, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல் நலனிலும் அக்கறை காட்டவேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். மார்ச் 2019-ல் ஏற்படவிருக்கும் ராகு பெயர்ச்சி, அதாவது ராகு உங்கள் ராசியின் 11-ம் வீட்டில் இருந்து 1௦-ம் வீட்டிற்கு இடம் மாறுவதும் சிறப்பாக இல்லை எனலாம்.

ராகு/கேது பெயர்ச்சிக்கு பின் கேது உங்கள் சுகஸ்தானத்தில் உள்ள சனீஸ்வரனோடு சேர்க்கை பெற்று உங்கள் ஜீவன ஸ்தானத்தை பார்ப்பதால் தாயின் உடல் நலம் குன்றுதல், வேலைப் பளுவால் சுக குறைவு, கூடுதல் பொறுப்புகள் போன்றவையும் அதிகரிக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கக்கூடும். அது உங்கள் அலுவலகத்தில் நீங்கள் ஆர்வமற்று வேலை பார்க்க வேண்டிய சூழலை ஏற்படுத்தலாம். சில விஷயங்கள் உங்களுக்கு எதிராக மாறக்கூடும். மார்ச் 2019 அல்லது செப்டம்பர் 2019 காலகட்டத்தில் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படலாம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள் கவனமாக இல்லை என்றால் சட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். என்றாலும் நவம்பர் மாதம் வரை குரு பகவானின் பார்வை உங்கள் ஏழாம் வீட்டிற்கு உள்ளதால் மனைவியால் அனுகூலம் உண்டு. மனைவி உங்கள் கஷ்டங்களை உணர்ந்து நடந்துகொள்வார். உங்கள் பாக்கியஸ்தானத்தையும் பதினோராம் வீட்டையும் குரு பார்ப்பதால் திடீர் பணவரவுகள் ஏற்படும். 

முதலீடுகள் செய்வதில் ரிஸ்க் மற்றும் ஊக வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அது பெரிய அளவில் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும். என்றாலும் குரு பெயர்ச்சிக்குப் பின் குரு பகவானின் பார்வை உங்கள் எட்டாம் வீட்டிற்கு இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் குறையும். ஜீவன ஸ்தானத்திற்கும் குருவின் பார்வை கிட்டுவதால் உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்றப் பதவி உயர்வு கிட்டும். என்றாலும் சனி மற்றும் கேதுவின் பார்வையும் உங்கள் 10 நிமிடத்தைப் பார்ப்பதால் பதவி உயர்வோடு பல புதிய பொறுப்புகளும் சேர்ந்து பணியில் வேலை பளுவை அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த 2019ஆம் வருடம் உங்களுக்கு ஒரு சவால் மிகுந்ததாகவே இருக்கும். ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின் எந்த ஒரு முக்கிய முடிவுகளும் எடுப்பது நல்லது. 

பரிகாரம்: இந்த வருடத்தில் நீங்கள் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை புதன் கிழமைகளில் வணங்கி வர உங்கள் வாழ்வில் இன்னல்கள் நீங்கி தன்னம்பிக்கையுடன் செயலாற்ற உதவும்.

{pagination-pagination}


துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

சுக்கிரனை அதிபதியாகக் கொண்டு புதுமை விரும்பிகளாகவும், ஆடை அலங்காரங்களிலும், கேளிக்கைகளிலும் ஆர்வம் கொண்டு ஜெனரஞ்சகமாக திகழும் துலா ராசி/லக்ன அன்பர்களே! இந்த 2019ம் வருடம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும் என்றால் மிகையில்லை. இந்த வருட ஆரம்பத்தில். சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும் குரு பகவான் 2-ம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்குப் பல அற்புதமான பலன்களைத் தருவார்கள். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நீங்கள் பெரிய அளவில் வளர்ச்சியைக் காணலாம். தொழிலதிபர்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் பொறுத்தவரையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு அதிகரிப்பு, வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

உங்கள் ஏழாம் வீட்டிற்கு சனி மற்றும் சர்ப கிரஹங்களின் பார்வை ஏற்படுவதால் கணவன் மனைவி உறவில் சிறு விரிசல்கள் ஏற்பட்டு சரியாகும். முயற்சிகளில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். ரியல் எஸ்டேட் முதலீடுகள் மற்றும் பங்கு சந்தை முதலீடுகள் சிறப்பாக இருக்கும். நான்காம் வீட்டில் இருந்த கேது மூன்றாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் வீடு வாகனம் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற காலகட்டமாகும். மார்ச் 2019-ல் வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி உங்கள் வெற்றியை அதிகப்படுத்தும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் கோட்டீஸ்வரராகவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் முக்கியஸ்தவர் அந்தஸ்தையும் அடைவீர்கள். இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செட்டில் ஆகிவிடலாம். ஒரு சிலருக்கு தொழில் காரணமாக வெளிநாடு பயணம், கணவன் மனைவி பிரிவு போன்றவையும் நிகழும். இந்த ஆண்டு முழுவதும் உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு சனியின் பார்வை இருப்பதால் பலருக்கு தூக்கமின்மை ஏற்படும்.

குருவின் பார்வை ஆறாம் வீடு மற்றும் பத்தாம் வீட்டிற்கு அமைவதால் வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் விரும்பிய இடத்திற்குப் பதவி மாற்றமும் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஆண்டின் ஆரம்பத்தில் குடும்ப ஒற்றுமையில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் நவம்பர் மாதத்தில் குரு பெயர்ச்சிக்கு பின் ஏழாம்வீடு குருவின் பார்வை பெறுவதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர். சிறுதூர பயணங்கள், சகோதர சகோதரிகளால் அனுகூலம், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம். திருமணத்திற்காகக் காத்திருக்கும் காளையர் மற்றும் கன்னியர்களுக்கு இந்த ஆண்டின் இறுதியில் திருமணம் நடைபெறும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது உங்கள் சுய ஜாதக அமைப்பையும் ஆய்ந்து முடிவு செய்வது நலம் பயக்கும். 

பரிகாரம்: இந்த ஆண்டில் நீங்கள் ஸ்ரீ மகாலக்ஷ்மியை வணங்கிவர உங்கள் வாழ்வில் மாபெரும் வளர்ச்சியைக் காணலாம்.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

செவ்வாயை அதிபதியாகக் கொண்டு தனிமை விரும்பிகளாகவும் ரகசியங்களை உள்ளடக்கியவர்களாகவும், நினைத்ததை அடைய சாமதான பேத தண்டம் என அனைத்து உபாயங்களையும் கையாளும் விருச்சிக ராசி/லக்ன அன்பர்களே! 

இந்த வருடத்தின் தொடக்கம் உங்களுக்கு ஒரு சோதனை காலமாக இருக்கக்கூடும். குரு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து ஏழரை சனியின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்துவார். லக்ன குரு உங்களை இந்த ஆண்டு முழுவது நேர்மையானவராக விளங்கச்செய்யும். புத்திர வழியில் மகிழ்ச்சி, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய், திடீர் வெளிநாட்டு வாய்ப்புகள் ஏற்படும். என்றாலும் பேச்சில் கவனம் தேவை. 

வரவிருக்கும் ராகு பெயர்ச்சியில் ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் கேது 2-ம் வீட்டிலும் மார்ச் 2019-ல் சஞ்சரிப்பதால் உங்கள் நிதிநிலை பாதிக்கக்கூடும். நீங்கள் உங்கள் உடல் நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிறிய வேலை பார்த்தாலும் நீங்கள் விரைவாகச் சோர்ந்து விடுவீர்கள்.  குடும்ப ஸ்தானத்தில் சனி கேது சேர்க்கை ஏற்படுவதால் குடும்ப உறவுகளில் சிறு சலசலப்பு ஏற்படும். என்றாலும் ஏழாமிடத்திற்கு குருவின் பார்வை கணவன் மனைவி உறவு பாதிக்காது, குருபகவானின் அதிசார கதியால் திடீர் பணவரவு, தொழில் முன்னேற்றம் ஏப்ரல் மாதம் வரை ஏற்படும். இந்த ராசியினருக்கு ஏழரை சனி நடைபெறுவதால் சிறிது நிதானம் தேவை.

நவம்பர் மாதம் வரை ராசி/மற்றும் லக்னத்தில் பயணிக்கும் குரு பகவான் உங்கள் 5 மற்றும் 9 வீடுகளைப் பார்ப்பதால் திடீர் பிரயாணங்கள், தீர்த்த யாத்திரைகள், ஆன்மீக பயணங்கள் போன்றவை ஏற்படும். குடும்பம் மற்றும் உங்கள் நிதி நிலையில் ஏற்படும் பிரச்னைகள் உங்கள் மன அமைதியைப் பாதிக்கக்கூடும். நீங்கள் நவம்பர் 2019 வரை எந்த ஒரு பெரிய ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பது நல்லது. எந்த விஷயம் செய்யும் முன்பும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் செயல்படுவது நல்லது. விஷ்ணு சஹசரநாமம் மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்பது சற்று ஆறுதலாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகளை முற்றிலுமாக இந்த 2019ஆம் வருடத்தில் தவிர்ப்பது நல்லது. 

நவம்பர் மாதத்திற்கு மேல் குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்திற்குச் சென்று ஆறாம் வீடு, எட்டாம் வீடு மற்றும் பத்தாம் வீடுகளைப் பார்க்க இருப்பதால் இந்தக் கால கட்டத்தில் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆண்டின் இறுதியில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை ஏற்படும். அதே நேரம் வேலைப் பளுவும் அதிகரிக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிட்டும். மருத்துவம், ரசாயனம் போன்ற துறைகளை தொழிலாகக் கொண்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

பரிகாரம்: இந்த வருடத்தில் நீங்கள் திருச்செந்தூர் முருகனையும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரையும் வணங்கிவர உங்கள் வாழ்வில் ஒளி வீசும். மேலும் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com