காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தையொட்டி சௌரி கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பகல் பத்து 7-ஆம் நாளான இன்று செளரி கொண்டை, ரத்தின அபய ஹஸ்தம், லட்சுமி பதக்கம், முத்துச்சரம், பவழ மாலை, அடுக்குப் பதக்கங்கள் முதலான திருவாபரணங்கள் சாற்றிக்கொண்டு திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களை கேட்டவாறு சேவை சாதித்தார் பெருமாள்.