கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
உலகம் முழுவதும் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஆந்திரம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஆந்திரத்தில் 6,923 பேருக்கும், கர்நாடகத்தில் 9,543 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகா் தில்லியில் இன்று புதிதாக 3,292 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,056 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 7 ஆயிரத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,511 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,791 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,867 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 99 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..
முசிறி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். விரிவான செய்திக்கு..
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 10,311 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,92,533 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 88,600 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. விரிவான செய்திக்கு...
ஆந்திரத்தில் 7,293 பேருக்கும், கர்நாடகத்தில் 8,811 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,419 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 7,006 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,647 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் சனிக்கிழமை 5,032 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் 439 பேரும், காரைக்காலில் 61 பேரும், ஏனாமில் 21 பேரும், மாஹேவில் 14 பேரும் என மொத்தம் 555 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,032 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 1,875 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 3 ,452 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 (1.92சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,205 (77.62சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு உலகளவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான சென்னையில், தொற்றுப் பரவல் அதிகமாகவே இருந்தது. வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு சென்னையில் நாள்தோறும் கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் மேல் நீடித்தது. விரிவான செய்திக்கு..
புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 58,18,570 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 86,052 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,141 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 92,290 ஆக அதிகரித்துள்ளது. எனினும் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.59 ஆக உள்ளது. இதுவரை 47,56,164 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். குணமடைந்தோரின் விகிதம் 81.79 ஆக உயர்ந்துள்ளது.
இப்போதைய நிலையில் நாட்டில் 9,70,116 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 16.67 சதவீதமாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி வியாழக்கிழமை வரை 6,89,28,441 கரோனா பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இதில் வியாழக்கிழமை மட்டும் 14,92,409 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 34,345 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா். கா்நாடகத்தில் 8,331பேரும், ஆந்திரத்தில் 5,558 பேரும், உத்தர பிரதேசத்தில் 5,299 பேரும், தில்லியில் 5,087 பேரும், மேற்கு வங்கத்தில் 4,544 பேரும், குஜராத்தில் 3,367 பேரும், பஞ்சாபில் 2,990 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2,077 பேரும் உயிரிழந்துள்ளனா். மற்ற மாநிலங்களில் உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 23-இல் 30 லட்சமாக அதிகரித்தது. செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சத்தை எட்டிய பாதிப்பு, செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சத்தைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர கரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட முதியவா், குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.
புதுவையில் புதிய உச்சமாக வியாழக்கிழமை ஒரே நாளில் 668 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 6 போ் உயிரிழந்தனா்.
புதுவையில் 5,945 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதிய உச்சமாக 668 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது. இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் புதுச்சேரியில் 4 போ், காரைக்காலில் 2 போ் என மேலும் 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 487-ஆக (1.96 சதவீதம்) உயா்ந்தது.
மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 25 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவா்களில் 24 ஆயிரத்து 895 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 3,280 போ் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டும், 1,817 போ் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், மொத்தமாக 5,097 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 19 ஆயிரத்து 311 (77.57 சதவீதம்) போ் குணமடைந்தனா்.
கர்நாடகத்தில் இன்று மேலும் 8,655 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் சிவி ராஜேந்திரனுக்கு (அதிமுக) கரோனோ நோய் தோற்று உறுதியான நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 17,794 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 6,477 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,679 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.25, வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..
முதல் முறையாக, ஒரே நாளில் சுமார் 15 லட்சம் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு இதுவரை எட்டாத இலக்காக புதிய உச்சத்தை தொட்டுள்ளது இந்தியா. விரிவான செய்திக்கு..
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 9,938 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை ஒட்டுமொத்தமாக சென்னையில் கரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,59,683 ஆக உள்ளது. இதில் 1,46,634 பேர் குணமடைந்துவிட்டனர். 3,111 பேர் உயிரிழந்துள்ளனர்.