இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 542 தொகுதிகளில் மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 339 மக்களவைத் தொகுதிகளிலும், காங்கிரஸ் 90 மக்களவைத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 3வது ஆணியில் உள்ள கட்சிகள் 113 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
மக்களவைத் தேர்தலுடன் ஒடிஸா, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
முதல் முறையாக இந்த தேர்தலில் தான் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்பட்டு சரிபார்க்கப்பட உள்ளன.
எங்களுடன் இணைந்திருங்கள். செய்திகள் உடனுக்குடன்
Gujarat: Prime Minister Narendra Modi's mother Heeraben Modi greets the media outside her residence in Gandhinagar. pic.twitter.com/yR2Zi9eeL1
— ANI (@ANI) May 23, 2019
மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக தலைமையிலான மோடி கூட்டணிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். உங்களுடன் இணைந்து பணியாற்ற மகிழ்ச்சியோடுமக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக தலைமையிலான மோடி கூட்டணிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். உங்களுடன் இணைந்து பணியாற்ற மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Congratulations to @narendramodi on a magnificent victory! We look forward to working closely with you.
— Ranil Wickremesinghe (@RW_UNP) May 23, 2019
Celebrations outside BJP HQ. Official EC trends, BJP leading on 295 seats. #ElectionResults2019 pic.twitter.com/oFUE2BqUOI
— BJP LIVE (@BJPLive) May 23, 2019
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார்
முதன்முறை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் எங்களது நெஞ்சார்ந்த நன்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை என்று பாமக தொண்டர்களுக்கு அதன் நிறுவனர் ராமதாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை என்று பாமக தொண்டர்களுக்கு அதன் நிறுவனர் ராமதாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருந்தும் தலைவர் கலைஞர் இருந்து இதனை பார்க்கவில்லையே என்ற கவலைதான் என்னை வாட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதன்முறை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
— Rajinikanth (@rajinikanth) May 23, 2019
தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு தந்துள்ளனர்
இந்த தேர்தலில் நாடு வென்றுள்ளது, நாட்டு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்
நாங்களும் எங்கள் கூட்டணி கட்சிகளும் இந்த பிரமாண்ட வெற்றியை மக்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்
130 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
भाजपा की एक विशेषता है कि हम कभी दो भी हो गए, लेकिन हम कभी अपने मार्ग से विचलित नहीं हुए।
— BJP (@BJP4India) May 23, 2019
आदर्शों को ओझल नहीं होने दिया।
न रुके, न झुके, न थके।
कभी हम दो हो गए, तो भी और आज दोबारा आ गए।
दो से दोबारा होने की यात्रा में कई उतार चढ़ाव आए: पीएम मोदी #VijayiBharat pic.twitter.com/8kRkLEvk9p
காங்கிரஸ் தலைவர் ராகுலைப் பொருத்தவரையில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தங்களுடைய நம்பகத்தன்மையைப் பெற்றவரைத் தான் மக்கள் தேர்வு செய்வார்கள். அதுபோன்று தான் எங்களை தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நம்பகத்தன்மை இல்லாதவர்களை மக்கள் தூக்கி வீசிவிட்டனர். விரைவில் நான் ஆந்திர முதல்வராக பதவியேற்க ஒரு நன்நாளை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.
மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுக தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு எழுந்து நிற்போம் என்று டிடிவி தினகரன் டிவீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். தூத்துக்குடியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே வேட்பாளராக நின்றேன். மக்கள் தவறு செய்துவிட்டார்கள். மோடிக்கு வாக்களித்திருந்தால் பல நன்மைகள் கிடைத்திருக்கும். தற்போது மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது ஊழல் குற்றச்சாட்டு உடைய ஒருவரை.
Bangalore South candidate @Tejasvi_Surya celebrates with his supporters after winning by a huge margin.
— TNIE@Bengaluru (@XpressBengaluru) May 23, 2019
Video:@shrirambn @santwana99 @NewIndianXpress #ElectionsWithTNIE pic.twitter.com/6lLWgp7FQU
17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சுமார் 350 தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
Respected dear @narendramodi ji
— Rajinikanth (@rajinikanth) May 23, 2019
hearty congratulations ... You made it !!! God bless.
குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டார்.
தற்போது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (23.5.2019) பாரதிய ஜனதா கட்சி, 2019 பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்கள் pic.twitter.com/Aw5qZ6O5Ae
— DIPR TN (@TNGOVDIPR) May 23, 2019
அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்திருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி, ராகுலை விட 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.