தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமியின் நுழைவுத் தேர்வுகளுக்கு வருபவர்களுக்காக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், கரோனா தொற்று காரணமாக தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமியின் நுழைவுத் தேர்வுகளுக்கு வருபவர்களில் வசதிக்காக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
புணே-ஹைதராபாத் (01155) சிறப்பு ரயில் புணேவிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் 2:15 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஹைதராபாத் வந்து சேர உள்ளது. திரும்பும் வழியில், இந்த ரயில் செப்டம்பர் 6-ம் தேதி இரவு 10:45 மணிக்கு ஹைதராபாதில் இருந்து புறப்பட்டு செப்டம்பர் 7 மதியம் 1:15 மணிக்கு புணே வந்து சேரும்.
மற்றொரு சிறப்பு ரயில் மும்பை எல்.டி.டி-ஹைதராபாத் (01157) மும்பை எல்.டி.டி.யில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு ஹைதராபாத் வந்து சேரும். திரும்பும் வழியில், அந்த ரயில் செப்டம்பர் 6-ம் தேதி இரவு 9:15 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு மும்பை எல்.டி.டி.க்கு வரும் என்று வெளியீடு தெரிவித்துள்ளது.