சித்தமருத்துவர்கள் திரிபலா சூரணத்தைத் தான் காயகல்பம் என்பார்கள்.
சர்வரோகநிவாரணியாகத் திகழும் திரிபலாவுக்கு இந்தப் பெயர் வெகு பொருத்தமே!
மலை நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் இந்த மூன்று மூலிகைக் காய்களையும் சம அளவில் எடுத்துக்கொண்டு வெயிலில் வைக்காமல் நிழலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பெயரை காயகல்பம் என்கிறார்கள் சித்தமருத்துவர்கள். இந்த சூரணத்தை விரற்கடை அளவோ அல்லது ஒரு சிறு டீஸ்பூன் அளவோ எடுத்து தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் உட்கொண்டால் போதும். உடல் எடை குறைப்புக்கு மட்டுமல்ல சீரான உடல் இயக்கத்துக்கும் இது பெரிதும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
சரி இவ்வளவு பலன் தரக்கூடிய திரிபலாவை எப்படி சாப்பிடறதுன்னு சிலருக்கு குழப்பம் வரலாம்.
பொதுவில் இதை மழைக்காலத்தில் வெந்நீரிலும் வெயில்காலத்தில் வெறும் தண்ணீரிலும் குளிர்காலங்களில் நெய் மற்றும் தேனிலும் கலந்து சாப்பிடலாம் என்கிறார்கள்.
திரிபலா சூரணத்தை வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம்.
சித்தமருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி, தினம் ஐந்து கிராம் சூரணம் எடுத்து 250 மில்லி கிராம் தண்ணீருடன் கொதிக்க வைத்து 60 மில்லியாகக் குறுக்கி வடிகட்டி காலை உணவிற்குப் பிறகு சாப்பிடுவது மிகவும் நல்லது.
சரி இவ்வளவு பலன் தரக்கூடிய திரிபலாவை சாப்பிடக் கூடிய முறைகள் குறித்துச் பலருக்கும் குழப்பம் வரலாம்.
திரிபலா சூரணத்தை வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம்.
சித்தமருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி, தினம் ஐந்து கிராம் சூரணம் எடுத்து 250 மில்லி கிராம் தண்ணீருடன் கொதிக்க வைத்து 60 மில்லியாகக் குறுக்கி வடிகட்டி காலை உணவிற்குப் பிறகு சாப்பிடுவது மிகவும் நல்லது.
தவிர இன்னும் சில வழிமுறைகளில் கூட திரிபலா சூரணம் எடுத்துக் கொள்ளலாம்.
அதையும் தெரிந்து கொள்வோம்.
தண்ணீரில் கரைத்து அருந்தும் முறை...
2 டீஸ்பூன் திரிபலா சூரணத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும். பின்னர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்தக் கரைசலை அப்படியே அருந்த விட வேண்டும்.
தேனில் கலந்து அருந்தும் முறை...
1 டீஸ்பூன் திரிபலா சூரணத்துடன் ஒரு சிறு துண்டு லவங்கப்பட்டை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு காலையில் எழுந்ததும் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
மேற்கூறியதில் எதுவுமே செய்ய முடியாதென்பவர்கள் பேசாமல் சித்தமருத்துவக் கடைகளில் கிடைக்கும் திரிபலா மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.
தினம் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 திரிபலா மாத்திரியைப் போட்டு விழுங்கினால் போதும் உடல் சுளுக்கெடுத்தாற் போல சுகமாகி பறப்பதற்குண்டான லகுத்தன்மை கொண்டதாகி விடும்.
டிஸ்க்கி: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அத்தனையும் பலர் பல சந்தர்பங்களில் பகிர்ந்த அனுபவக்குறிப்புகளே. இதை சகலருக்குமான மருத்துவ டிப்ஸுகளாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. கடுமையான உடல்நலக் கோளாறுகள் கொண்டவர்கள் அவரவருக்கான பெர்சனல் மருத்துவர்களை அணுகி தங்களுக்கான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும்.
கிச்சன் போர் அடிக்காம ஸ்டைலிஷ் & எவர் ஃப்ரெஷ்ஷா இருக்க... இதை ட்ரை பண்ணுங்களேன்!
வீணாகும் பழத்தோலில் பாத்திரம் துலக்கும் பெளடர் தயாரிப்பு! அம்மா கேண்டீன்களின் சாமர்த்தியம்!
கடுகுக் கீரையில் அப்படி என்ன இருக்கு?
‘உலகின் எந்த மூலைக்குச் சென்ற போதும் திரும்ப வரத் தூண்டும் ஒரே இடம் என் வீடு’: ராணா டகுபதி!
இல்லத்தரசிகளே! இந்த 5 மினிட்ஸ் கிராஃப்ட்ஸ் எல்லாம் உங்களுக்கு வொர்க் அவுட் ஆகுதா?