கடைசியா எப்போ நீங்க ஹேப்பியா ஃபீல் பண்ணீங்க? 

ஆமா இப்போ எதுக்கு இப்படி ஒரு ஹேப்பி மொமெண்ட்ஸ் லிஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன்னு நீங்க கேட்கலாம். கேட்கனும்
கடைசியா எப்போ நீங்க ஹேப்பியா ஃபீல் பண்ணீங்க? 

இந்த வாழ்க்கை ஆயிரமாயிரம் அற்புதத் தருணங்களால் நிரம்பியது...

உங்க வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவண்ட் செய்து பார்த்தீங்கன்னா உங்களுக்கே அது புரியும்.

நீங்க எப்போல்லாம் சந்தோசமா உணர்ந்தீங்கன்னு யோசிச்சுப் பாருங்க;

ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வந்து கிளாஸ் டீச்சர் பென் கிஃப்ட் கொடுக்கும் போதுன்னு ஆரம்பிக்கலாம். ஆனா அது க்ளிஷேவா ஆயிடும். உங்க மனசுக்குள்ள இன்னும் கொஞ்சம் ஆழமா ட்ராவல் பண்ணுங்க. யெஸ்... போர் அடிச்சுக் கிடக்கிற சம்மர் ஹாலிடேஸ் நாட்கள், இன்னும் 1 மாசம் லீவிருக்கே, எங்கயும் போக முடியலையேன்னு நொந்து போய் பராக்குப் பார்த்துட்டு இருக்கும் போது திடீர்னு அம்மாவோ, சித்தியோ, பக்கத்து வீட்டு ஆண்ட்டியோ, உங்க வயசுல ஒரு குட்டிப் பெண்ணையோ, பையனையோ அழைச்சிட்டு வந்து, இவளையும் விளையாட்டுல சேர்த்துக்குங்கன்னு சொன்ன நிமிஷத்துல சோர்ந்து போன மனசு சும்மா பல்ப் போட்ட மாதிரி உற்சாக ஒளி வெள்ளத்தில் மிதக்க ஆரம்பிச்சிரும் அதுல தொடங்கலாம் ஹேப்பி மொமெண்ட்ஸை...

அப்புறம் இருக்கே வரிசையா...

ஸ்கூல்ல நம்ம கிரஷ் எய்தர்  பாய் ஆர் கேர்ள் திடீர், திடீர்ன்னு நம்ம எதிர்ல வரும்போதெல்லாம் சும்மா ஜிவ்வுன்னு காத்துல பறக்கற மாதிரி இருக்கும் மனசு...

அப்புறம் கில்லி ஆடினாலும் சரி கோலி ஆடினாலும் சரி தாயமாடினாலும் சரி ஜெயிச்சுட்டா வருமே ஒரு கிறக்கம். அதுக்கு ஈடு இணை இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.

நைன்த் படிச்சு முடிக்கற வரை கவர்ன்மெண்ட் பஸ் மாதிரி ஸ்லோவா ஜாலியா போற லைஃப் 10 த் வந்ததுமே எக்ஸ்ட்ரா லோட் ஏத்தினா மாதிரி கொஞ்சம் மூச்சுத் திணறி வருஷக் கடைசில பரீட்சை எழுதி முடிச்ச கடைசி நாள் சாயங்காலப் பொழுதுகளை யோசிங்க... அப்புறம் ரிசல்ட் வரனும். 11 த் போகனும். ஆசைப்படற குரூப் கிடைக்கனும். பாஸாகி 12 த் போகனும். அப்புறம் திரும்ப பப்ளிக் எக்ஸாம் ஃபீவர். அது முடிஞ்சதும் ஒரு சின்ன ஹேப்பி மொமெண்ட்ஸ். ரிசல்ட் வந்ததும் காலேஜ் போற சந்தோசமிருக்கே.

அது எஞ்சினியரிங் காலேஜோ, ஆர்ட்ஸ் காலேஜோ எதுவா வேணா இருந்துட்டுப் போகட்டும்

.

முதல் நாள் காலேஜ் போற அனுபவம் இன்னைக்கும் கூட அப்படியே பசுமையாக மனசுல நிக்கும். காரணம் அந்த தருணங்கள் அத்தனை அழகானவையாக நம்மால் டிஸைன் செய்யப்பட்டிருக்கும் என்பதால். முதல் நாள் காலேஜ், அதுலயும் கோ எட் காலேஜ்னா சொல்லவே வேண்டாம் மனசின் பரபரப்பை. ஒட்டுமொத்த காலேஜும் நம்மள தான் பார்க்குதுன்னு ஒவ்வொரு பொண்ணும், ஒவ்வொரு பையனுமே தனக்குத் தானே கற்பனை பண்ணிட்டு மந்தாரமா திரியற அந்தக் காலம் இருக்கே நத்திங் கேன் ரீப்ளேஸ் இட் தெட் குட் ஓல்ட் டேய்ஸ்.

இங்கே காதலில் விழுந்து கசிந்துருகி வாழ்க்கைக்கு எக்ஸ்ட்ரா எஃபெக்ட்ஸ் சேர்த்துக்கிறவங்களும் இருக்காங்க. சும்மா வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் கூட்ட கிரஷ் மட்டும் போதும்னு கண்களால் மட்டும் பேசி காணாமல் போறவங்களும் இருக்காங்க. எப்படிப் பட்டவங்களுக்கும் காலேஜ் டேய்ஸ் சம்திங்க் ஸ்பெஷல் தான்.

ஒரு டிகிரி முடிச்சாச்சா? பொண்ணுங்கன்னா அடுத்து கல்யாணம்னு ஆரம்பிச்சிடுவாங்களே வீட்ல.

வரப்போற ராஜகுமாரன் எப்படி இருப்பான்னு யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள கல்யாணமாகி அடுத்த கட்ட புது வாழ்க்கையே ஆரம்பமாயிரும் பலருக்கு. இந்த வாழ்க்கையில் ஆயிரம் கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் அடுத்தடுத்து சுவாரஸ்யம் கூட்ட நிறைய தருணங்கள் இடைப்படும். முதலாவதா முதல் குழந்தைக்கு கருத்தரிக்கிற மொமெண்ட். அடுத்து அது ஆணா, பெண்ணாங்கற கற்பனைகளோட 9 மாதம் வயிற்றில் சுமக்கும் மொமெண்ட்... பிறந்ததும் அது யார் ஜாடைன்னு கண்டுபிடிக்கற மொமெண்ட், அப்புறம் குழந்தை வளர்கிற ஒவ்வொரு நொடியுமே எல்லா அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்குமே சம்திங் ஸ்பெஷலோ ஸ்பெஷல் தான்.

அப்படி வளர்கிற குழந்தைகளை முதல்நாள் பள்ளிக்கு அனுப்பற அனுபவம்... குழந்தைகளைப் பொருத்தவரைக்கும் அவங்களுக்காக நாம செய்யற ஒவ்வொரு விஷயமுமே சந்தோசமான அனுபவங்களை மட்டுமே அடிப்படையா கொண்டு தான் கட்டமைக்கப்பட்டிருக்கறதா ஒவ்வொரு பேரண்ட்ஸுமே நினைச்சுக்கிறோமே அது அற்புதமான சந்தோஷ தருணமில்லையா.

யெஸ் அப்புறம் ஆணோ, பெண்ணோ முதன் முதல்ல ஒரு வேலையில் சேர்ந்து முதல் மாச சம்பளத்தை கையில் வாங்கி ஸ்பர்சிக்கும் போது ஆனந்தக் கண்ணீர் வராத குறையா ஒரு ஃபீல் வரும் பாருங்க. அந்த ஹேப்பியஸ்ட் மொமெண்ட்ஸுக்கும் இந்த உலகத்தில் ஈடு இணை கிடையாது.

அப்புறமா இருக்கவே இருக்கு சொந்தமா வீடு கட்டி கிரஹப் பிரவேஷம் செய்து குடி போகற ஹேப்பி மொமெண்ட்...

வளரும் பிள்ளைகளின் ஒவ்வொரு சக்ஸஸையும் கிட்ட இருந்து பார்த்து பரவசப்படுகிற ஹேப்பி மொமெண்ட்ஸ்... 

அட நில்லுங்க... நில்லுங்க...

ஆமா இப்போ எதுக்கு இப்படி ஒரு ஹேப்பி மொமெண்ட்ஸ் லிஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன்னு நீங்க கேட்கலாம்.

கேட்கனும்.

ஏன்னா? வாழ்க்கைங்கறது சந்தோசமான தருணங்களைப் போலவே சில கசப்பான தருணங்களையும் தன்னகத்தில் கொண்டதா தான் இருக்கு. அந்த மாதிரியான நேரங்களில் மீண்டும் ஒரு வெளிச்சப் புள்ளியை தரிசிப்பதற்கான நம்பிக்கையை நாம் மீட்டெடுக்க உதவியா இருக்கிறது நாம் மேலே சொன்ன அந்த அற்புத தருணங்களே! அதனால, வாழ்க்கையை புரிஞ்சு வாழும் யாருமே பிரச்னைகளுக்கான தீர்வா ஒரு போதும் வன்முறையையோ, வஞ்சத்தையோ, தற்கொலையையோ, அல்லது துரோகத்தையோ நினைச்சுப் பார்த்திட வேண்டாம்.

ஏன்னா இந்த வாழ்க்கை ஆயிரமாயிரம் அற்புத தருணங்களால் நிரம்பியது.

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோன்னு கேட்ட நம் மகாகவி பாரதியின் வார்த்தைகளைப் பின்பற்றி வாழ்வை மேலும் மேலுமென அற்புத தருணங்களால் நிரப்பிக் கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com