செய்திகள்

பேராபத்தை ஏற்படுத்தும் ஹீட் ஸ்ட்ரோக்: தற்காத்துக்கொள்வது எப்படி?

DIN

பொதுவாக கோடைக்காலத்தில் வெயிலின் அதீத தாக்கத்தால் ஏற்படுவதுதான் ஹீட் ஸ்ட்ரோக்(வெப்ப பக்கவாதம்) பாதிப்பு. மாரடைப்பைப் போன்று இதுவும் அதிக பேராபத்தை ஏற்படுத்தும். 

நம் உடலில் உள்ள வெப்பநிலையும், பிஎச் அளவும் எப்போதும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான் ரத்தத்திலுள்ள ரசாயனங்கள் அனைத்து சரியாக வேலை செய்யும். வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது நம் உடல் உறுப்புகள் திடீரென்று தானாகவே செயலிழக்கத் தொடங்கும்.

பொதுவாக நமது உடல் அதிக வெப்பநிலையினை வேர்வையின் மூலம் வெளியேற்றி சமநிலைக்குக் கொண்டு வருகின்றது. ஆனால் வெப்ப பக்கவாதம் பாதிக்கப்படும்போது நமது உடல் அதைச் செய்யத் தவறிவிடுகிறது. 

மாரடைப்பைப் போன்று திடீரென்று உயிரைப் பறிக்கும் மற்றொரு பாதிப்பு இந்த வெப்ப பக்கவாதம். நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டென்று மயங்கிவிழுந்து, இறந்துவிடும் நிலை ஏற்படுத்தும். இது கோடைக்காலத்தில் சர்வ சாதாரணமாக நிகழும். கோடை வெப்பம் தாங்காமல் பலர் இவ்வாறு உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழக்கின்றனர்.

ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுவான அறிகுறிகளில் பலவற்றைக் கொண்டிருக்கலாம். 

அறிகுறிகள்

உடல் சூடு அதிகரித்தல், வேர்வையின்மை, வறண்ட சருமம், மூச்சுத் திணறல், மயக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி, இதயத் துடிப்பு அதிகரித்தல், குழப்பம், எரிச்சல் என அறிகுறிகளை ஏற்படுத்தும். 

அசௌகரியம் ஏற்பட்டால் என்ன செய்வது?

வீட்டில் அடைந்து கிடக்காமல், காற்றோட்டமான பகுதிக்குச் செல்லவேண்டும். 

தளர்வான ஆடைகளை உடுத்த வேண்டும். 

அதிகப்படியான நீர் பருக வேண்டும். அப்படியும் சீரடைவில்லையெனில் உடனே மருத்துவரை அணுகலாம். 

எப்படித் தற்காத்துக் கொள்வது? 

தாகம் எடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். மோர், இளநீர் போன்ற குளிர்ச்சியான பானங்களை எடுத்துக்கொள்ளலாம்.

கூடுமானவரை பகல் நேரத்தில் மதுபானம், தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கலாம். 

வெயிலில் வெளியே செல்லும் போது தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்தலாம். 

மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். 

முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளியைத் தவிர்க்கலாம். 

உணவு விநியோகம் செய்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

விலங்குகளை வெயிலில் விடுவதைத் தவிர்க்கலாம். 

இவ்வாறு இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றிவந்தால் வெப்ப பக்கவாதம்(ஹீட் ஸ்ட்ரோக்) நம்மை நிச்சயம் தாக்கது என்பது உறுதி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT