நடிகை கெளதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர். 'லைஃப் அகைன்' என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் புற்றுநோய் சிகிச்சை, புற்று நோயை எதிர்த்து போராடும் மன வலிமை, வாழ்க்கையின் உண்மையான அர்த்தம், தன்னம்பிக்கை, மன உறுதி, உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு ஆசோலசனைப் பெற்று நலம் அடைந்து செல்கிறார்கள்.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் தன்னுடைய பகுதியில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களுடன் பேசி, அவர்களுக்கு அன்பளிப்பு அளித்து புத்தாண்டை தொடங்கியிருக்கிறார். எல்லாருக்கும் கஷ்ட நஷ்டங்கள் இருக்கிறது. அதையெல்லாம் மீறி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்று அவர்களிடம் கூறினார் கெளதமி. நீங்கள் இல்லையெனில் நாங்கள் இல்லை என்று தன்னுடைய அன்பை அவர்களுட பரிமாறிக் கொண்டார் கெளதமி.