செய்திகள்

தூக்கத்தில் கூட திறமையுடன் இருக்க வேண்டுமா?

DIN

ரோஜாவின் வாசனை ஒருவரின் கற்கும் தரத்தை மேம்படுத்துவதோடு, இரவில் நன்றாக தூங்கவும் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.  ஆங்கில அகராதியைக் கற்றுக் கொள்ளுமாறு இரண்டு வகுப்புகளின் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவற்றில் ஒரு குழுவினர் ஊதுபத்தி வாசனையை நுகரும்படியான இடத்தில் படித்தனர். மற்றொரு குழுவினர் எந்த வாசனையும் இல்லாத அறையில் படித்தனர்.

"ஊதுபத்தி நறுமணத்தின் விளைவு இயல்பாகவே ஒருவரின் நினைவுத் திறனை அதிகரித்து அருமையாக செயல்படுவதை நாங்கள் கண்டுபிடித்தோம், இயல்பாக இருக்கும் ஒரு விஷயத்தை இலக்காக வைத்தும் பயன்படுத்தலாம்" என்று ஜெர்மனியில் உள்ள ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுத் தலைவர் ஜூர்கன் கோர்ன்மியர் கூறினார்.

ஆய்வுக்காக, தலைமை எழுத்தாளரும் மாணவர் ஆசிரியருமான ஃபிரான்சிஸ்கா நியூமன் தெற்கு ஜெர்மனியிலுள்ள ஒரு பள்ளியின் 6-ஆம் வகுப்பைச் சேர்ந்த 54 மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து பல பரிசோதனைகளை மேற்கொண்டார்.

பரிசோதனைக் குழுவில் பங்கேற்ற இளம் பங்கேற்பாளர்கள் ஆங்கில அகராதியைப் படிக்கும் போது ரோஜாப்பூ வாசனை வரும் ஊதுப்பத்திக் குச்சிகளை வீட்டில் தங்கள் மேஜைகளிலும், இரவு படுக்கைக்கு செல்லும் போது படுக்கைப் பக்கத்திலிருக்கும் மேசையில் வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மற்றொரு பரிசோதனையில், பள்ளியில் ஆங்கில அகராதிப் பரீட்சையின் போது இந்த ஊதுபத்திக் குச்சிகளை அவர்களுக்கு அடுத்த மேஜையில் வைத்தார்கள்.

ஊதுபத்திக் குச்சிகள் பயன்படுத்தப்படாத சோதனை முடிவுகளுடன் பயன்படுத்தப்பட்ட முடிவுகள் ஒப்பிடப்பட்டன.

"ஊதுபத்திக் குச்சிகளைப் பயன்படுத்தினால் மாணவர்கள் கற்கும் திறனில் சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது" என்று நியூமன் கூறினார்.

ஊதுபத்தியின் வாசனை நினைவுத் திறனை மேம்படுத்துகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

"ஆரம்ப ஆய்வுக்குப் பிறகு குறிப்பிட்ட கண்டுபிடிப்பு என்னவென்றால், ரோஜா ஊதுபத்தியின் நறுமணம் இரவு முழுவதும் இருக்கும்போது கூட வேலை செய்கிறது" என்று கோர்ன்மியர் கூறினார்.

முந்தைய ஆய்வுகள் பகலில் மட்டுமே இந்த வாசனை உணர்திறனாக இருக்கும் என்ற நிலையில் தற்போது உறக்கத்திலும் கூட இருக்கும். அதனால் கற்றன் திறன்பாடு அதிகரிக்கும் என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது. இதற்கெல்லாம் காரணம் நம் மூக்கு என்று யார் நினைத்திருக்க கூடும்’ என்று கோர்ன்மியர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT