பசுமைத் தீர்ப்பாய பரிந்துரையின்படி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

பசுமைத் தீர்ப்பாய பரிந்துரையின்படி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஆயினும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுப்பு எனும் விஷயத்தில் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடுத்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம்  நிராகரித்தது. அத்துடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்காலத் தடையையும் உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.

ஆயினும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுப்பு எனும் விஷயத்தில் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு என்பது தமிழக அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிரானது என்றும் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

தொழிற்சாலைகளுக்கு என தனி சட்டம் உள்ளதாகவும். அதை மீறிச் செயல்பட்டதால் தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். எனவே பசுமைத் தீர்ப்பாயம் அனுமதித்தாலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு உதவாது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com