குக்கர் வெயிட்டின் மீது தண்ணீர் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயிட்டைக் கழுவக் கூடாது. கீழே போடவும் கூடாது.முகம் பார்க்கும் கண்ணாடியை நாளிதழ் காகிதத்தால் துடைத்தால் பளபளப்பாகும்.எண்ணெய் மற்றும் நெய் படிந்த பாத்திரங்களை முதலில் காகிதத்தால் துடைத்த பிறகு சோப்பினால் கழுவினால் சுத்தமாகும்.உப்பு கலந்த நீரில் துணியை முக்கி வைத்து பத்து நிமிடத்துக்குப் பிறகு அலசினால் காபிக் கறை மறைந்து போகும்.முட்டைக் கோஸ் சமைக்கும் போது எலுமிச்சை சாறு சிறிது சேர்த்தால் கோஸ் வாசனை வராது.சாதம் செய்யும் போது இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டால் பிரியாணி கட்டி தட்டிப் போகாமல் இருக்கும்.வெங்காயத் துண்டுகளை உப்பு தடவி பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வறுத்தால் நன்றாக வறுபடும்.பாயசம் வைக்கும் போது பாசிப்பருப்போடு அரிசியோ, ஜவ்வரிசியோ நன்றாக வேக வைத்த பிறகுதான் இனிப்பு சேர்க்க வேண்டும் .முருங்கை இலை உருவிப் போட்டுக் காய்ச்சி வைத்தால் தேங்காய் எண்ணெய் காராமல் இருக்கும்.உப்புத் தண்ணீர் தெளித்துத் துடைத்தால் சாப்பாட்டு மேஜையில் ஈக்கள் தொல்லை குறையும்.கொதி நீரில் முக்கி எடுத்தால் போதும் தக்காளியின் தோல் எளிதாக வந்துவிடும்.சுத்தமான நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து கொதிக்க வைத்தால் நெய் கெடாமலிருக்கும்.உப்பு கலந்த குளிர்ந்த நீரில் துணியை முக்கி வைத்த பிறகு சோப்பு உபயோகித்தால் துணி மீது படிந்த வாழைக்கறை மறையும்.கடலை மாவும், எலுமிச்சைச் சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் வெள்ளி நகைகள் பளபளப்பாகும்.பருப்பை வேக வைக்கும் போது சிறிது எண்ணெய் விட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.வெங்காயத்தை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து பிறகு தோல் களைந்து நறுக்கினால் கண்ணிலிருந்து நீர் வராது.. - நெ.இராமன், சென்னை..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
குக்கர் வெயிட்டின் மீது தண்ணீர் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயிட்டைக் கழுவக் கூடாது. கீழே போடவும் கூடாது.முகம் பார்க்கும் கண்ணாடியை நாளிதழ் காகிதத்தால் துடைத்தால் பளபளப்பாகும்.எண்ணெய் மற்றும் நெய் படிந்த பாத்திரங்களை முதலில் காகிதத்தால் துடைத்த பிறகு சோப்பினால் கழுவினால் சுத்தமாகும்.உப்பு கலந்த நீரில் துணியை முக்கி வைத்து பத்து நிமிடத்துக்குப் பிறகு அலசினால் காபிக் கறை மறைந்து போகும்.முட்டைக் கோஸ் சமைக்கும் போது எலுமிச்சை சாறு சிறிது சேர்த்தால் கோஸ் வாசனை வராது.சாதம் செய்யும் போது இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டால் பிரியாணி கட்டி தட்டிப் போகாமல் இருக்கும்.வெங்காயத் துண்டுகளை உப்பு தடவி பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வறுத்தால் நன்றாக வறுபடும்.பாயசம் வைக்கும் போது பாசிப்பருப்போடு அரிசியோ, ஜவ்வரிசியோ நன்றாக வேக வைத்த பிறகுதான் இனிப்பு சேர்க்க வேண்டும் .முருங்கை இலை உருவிப் போட்டுக் காய்ச்சி வைத்தால் தேங்காய் எண்ணெய் காராமல் இருக்கும்.உப்புத் தண்ணீர் தெளித்துத் துடைத்தால் சாப்பாட்டு மேஜையில் ஈக்கள் தொல்லை குறையும்.கொதி நீரில் முக்கி எடுத்தால் போதும் தக்காளியின் தோல் எளிதாக வந்துவிடும்.சுத்தமான நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து கொதிக்க வைத்தால் நெய் கெடாமலிருக்கும்.உப்பு கலந்த குளிர்ந்த நீரில் துணியை முக்கி வைத்த பிறகு சோப்பு உபயோகித்தால் துணி மீது படிந்த வாழைக்கறை மறையும்.கடலை மாவும், எலுமிச்சைச் சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் வெள்ளி நகைகள் பளபளப்பாகும்.பருப்பை வேக வைக்கும் போது சிறிது எண்ணெய் விட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.வெங்காயத்தை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து பிறகு தோல் களைந்து நறுக்கினால் கண்ணிலிருந்து நீர் வராது.. - நெ.இராமன், சென்னை..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்