நேற்று விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையாருக்கு கொழுக்கட்டை செய்து படைத்தோம். விதம் விதமான கொழுக்கட்டைகள். பூரணம் சேர்த்து, தேங்காய் துருவிப் பிசிறி விட்டு, காரக் கொழுக்கட்டை என்று வெரைட்டியாகச் செய்தோம். ஆனால், பெரும்பாலும் பெரியவர்களே சாப்பிட்டுக் கொண்டிருந்தோமே தவிர பிள்ளைகள் அப்போதும் ம்மா, இன்னைக்கு ஃபெஸ்டிவல் ஆஃபரா வெஜ் பீட்ஸா ஆர்டர் பண்ணுங்களேன்! என்று நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். ச்சே... நாளும், கிழமையுமா வீட்ல பீட்ஸாவா! நோ சான்ஸ், இன்னைக்கு இந்தக் கொழுக்கட்டை சாப்பிட்டா தான் விநாயகர் அருள் பரிபூரணமா கிடைக்குமாக்கும். இல்லனா பிள்ளையார் கோவிச்சுப்பார். என்றேன். சின்னவள் நம்பினாள், பெரியவளுக்கு நம்பிக்கை பூரணமாகவில்லை. அவளுக்காக கொஞ்சம் தேடிக் கண்டுபிடித்து கண்ணில் பட்ட கடவுள்களுக்கெல்லாம் பிடித்த உணவு... ஐ மீன் ஃபேவரிட் ஃபுட் என்ன என்று கண்டுபிடித்தோம். பிறகு அவளும் கூட குத்துமதிப்பாக நம்பத் தொடங்கினாள். ஒருவழியாக செய்து வைத்த விதம் விதமான கொழுக்கட்டைகள் தீர்ந்தன.
கடவுள்களுக்குப் பிடித்த உணவு என்றால் அது நாம் அவர்கள் மேல் கொண்டிருக்கும் பூரண பக்தியாகவே இருக்கலாம். இந்த பக்தியை அருந்தி, அருந்தியே அவர்களது சக்தி கூடுகிறதோ என்னவோ?! ஆயினும் மனிதர்களான நாம் நமக்குள் சில நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நமக்குப் பிடித்த கடவுளருக்கு இன்னின்ன உணவுகள் தான் பிடித்தமானவை என்று. உண்மையில் கடவுளருக்கு அது தான் பிடிக்குமோ என்னவோ? ஆனால், நம் குழந்தைகளை சத்தான ஆகாரங்களுக்குப் பழக்க நாம் ஏன் இதை ஒரு உபாயமாக்கிக் கொள்ளக் கூடாது?! எந்நேரமும் கடைகளில் விற்கப்படும் அசைவ உணவுகளுக்கும், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளுக்கும் அடிமையாகிக் கிடக்கும் குழந்தைகளை மீட்க தெய்வ நம்பிக்கையை உணவு விஷயத்திலும் அழுத்தமாகப் பதிய வைக்கலாமே!
முயற்சித்துப் பாருங்கள். முடிந்தால் நல்லது.
முதலில் காளை வாகனரான எம்பெருமான் மகாதேவரில் தொடங்கலாம்.
இவ்வளவு தான் கண்டுபிடிக்க முடிந்தது. கட்டுரையை வாசிப்பவர்கள் கடவுளருக்குப் பிடித்த உணவுகள் விஷயத்தில் உங்களுக்குத் தெரிந்த ஐதீக நம்பிக்கைகளைப் பகிருங்கள்.
‘5 ரூபாய் சாப்பாடு’ 25 வருடங்களாக ஒரே விலையில் சாப்பாடு தரும் அன்னதானப் பிரபு!
நாசியைச் சுண்டி இழுக்கும் சுவையும் மணமுமான கோயில் புளியோதரை செய்வது எப்படி?
ஜூலை முதல் ஆகஸ்டு வரையிலான மழைக்காலத்துக்கு உகந்த ஒளஷதக் கஞ்சி ரெசிப்பி!
ஒதிஷா பூரி ஜகன்னாதருக்குப் பிடித்த ‘டங்கா தொராணி’ பானம் செய்து அருந்தலாமா?
அல்லேலூயா உணவகம் ‘அக்கா கடை’யைப் பத்தி பிரமாதமா பேசிக்கிறாங்களே! நீங்க சாப்பிட்டிருக்கீங்களா?