சென்னையின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னையில் கடந்த சில தினங்களாகவே இரவு நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,827 பேருக்கு கரோனா தொற்று
அண்ணாநகர், திருமங்கலம், அம்பத்தூர், வடபழனி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. இதனால் இரவு நேரங்களில் வேலை முடித்து வீடு திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.