தற்போதைய செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்

DIN

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சிலையை முறையாகப் பராமரிக்கக் கோரியதற்கு உரிய உத்தரவாதத்தை அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சிலை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த அக்டோபர் 16ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், “மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவச் சிலையை தமிழக அரசு சார்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படும்" என்ற உத்தரவாதத்தை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் மூலம் தெரிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT