பொதுவிநியோகத் திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்க தமிழக அரசு முயற்சித்தால் அஇஅதிமுக கடுமையாக எதிர்க்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை அவர்களின் ஆதார் எண்ணுடன் வழங்குமாறு வருமான வரித்துறையினை உணவுத் துறை வாயிலாக கேட்டுள்ளது அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்பதை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | 'புதிய வகை கரோனா ஒரு தீவிர அச்சுறுத்தல்' - ராகுல் காந்தி
மேலும் வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நோக்கத்தையே சீர்குலைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், “வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து "அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும்" முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால், அதனை அஇஅதிமுக கடுமையாக எதிர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்