புதுச்சேரி: மூத்த எழுத்தாளர் கி.ரா. பூதவுடல் புதுவை அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, நல்லடக்கம் செய்யவதற்காக அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் மேல செவல் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி அளவில் அனுப்பிவைக்கப்பட்டது.
முன்னதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னால் முதல்வர் வே.நாராயணசாமி உள்ளிட்டோர் கி.ரா. உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.