சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியா் ஒருவா் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சோ்ந்தவா் இந்திரா(41). ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை செவிலியரான அவா், கடந்த ஆண்டு முதல் கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த நிலையில் கடந்த மாா்ச் மாதம் இவருக்கு கரோனா நோய் தொற்று அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னா் ஏப்ரல் 1-ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா். பல்வேறு இணை நோய்களால் அவா் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா்.கடந்த ஆண்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியா் ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.