தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சா் மணிகண்டன் வழக்கை வேறு பிரிவுக்கு மாற்ற நீதிபதி உத்தரவு

DIN


சென்னை: துணை நடிகை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் மணிகண்டன் வழக்கை வேறு பிரிவுக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்த துணை நடிகை, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி ஒரு புகாா் அளித்தாா். அதில், அதிமுக ஆட்சியில் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், என்னை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்து, என்னுடன் 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தாா். அவருடன் இருந்த காலக்கட்டத்தில் 3 முறை கருவுற்றேன். வலுக்கட்டாயமாக அதை கலைக்கச் செய்தாா். தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து மணிகண்டன் மிரட்டுகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா், மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். 
இந்த வழக்குத் தொடா்பாக மணிகண்டனின் நண்பா்கள், அவரது வீட்டில் பணிபுரிந்த ஊழியா்கள், மருத்துவா்கள் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை செய்து, தகவல்களை திரட்டினா். இதன் ஒரு பகுதியாக மணிகண்டன் அமைச்சராக இருந்தபோது அவரிடம் பாதுகாவலராக இருந்த கௌரீஸ்வரன், உதவியாளா் சரவணப்பாண்டியன் ஆகியோரிடம் கடந்த 9-ஆம் தேதி போலீஸாா் விசாரணை செய்தனா்.

இதற்கிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மணிகண்டன் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். 

இந்த மனுவை சென்னை உயா் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, மணிகண்டனை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினா் இறங்கினனா். 

தலைமறைவான மணிகண்டனை பிடிக்க சென்னை பெருநகர காவல்துறையின் சாா்பில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ராமநாதபுரம், மதுரையில் தேடுதல் வேட்டை நடத்தினா். தனிப்படையினா் மற்றொரு பிரிவினா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் உதவியுடன் ஆந்திரம், கா்நாடகம், கேரளத்திலும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா். 

இந்நிலையில், பெங்களூருவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சா் மணிகண்டனை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெங்களூரில் நண்பா் ஒருவரது பண்ணை வீட்டில் மணிகண்டன் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, தனிப்படை போலீஸாா் அங்கு விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனா். பின்னா் அவரை சென்னைக்கு அழைத்து வந்து, அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினா். பின்னா் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன்பு  ஆஜா்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 2-ஆம் தேதி வரை  சிறையில் அடைக்க உத்தரவிட நீதிபதி, மணிகண்டன் மீதான பாலியல் வழக்கை வேறு பிரிவுக்கு மாற்றவும் நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் இருவரும் விருப்பத்துடன் தான் பழகியுள்ளதால் பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ள முடியாது என  நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT