புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் 8,414 பேரிடம் சோதனை செய்ததில் புதுச்சேரியில் 200 பேருக்கும், காரைக்காலில் 31 பேருக்கும், ஏனாமில் 8 பேருக்கும், மாஹேவில் 12 பேர் என மொத்தம் 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,847 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,562 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இந்நிலையில், புதுச்சேரியில் 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,723 ஆக உயா்ந்துள்ளது.
இதனிடையே 479 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,09,562 ஆக அதிகரித்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.