திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,073 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 266 போ் அவா்களது வீடுகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பப்பட்டனா்.
மாவட்டத்தில் இதுவரையிலும் தொற்று பாதிக்கப்பட்ட 34,692 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,073 போ் சிகிச்சையில் உள்ளனா்.