உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார்.
2 நாள் பயணமாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை தில்லி சென்றடைந்தார். இந்தப் பயணத்தில், பாஜக தலைவர்களை சந்தித்து வரும் அவர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மாநில நிலவரம் குறித்து யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.