தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

s
கிருஷ்ணகிரி: பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி பெங்களூர் சாலை பழைய வீட்டு வசதி வாரியம் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் தளபதி ரகமத்துல்லா தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் அப்சல், மாவட்ட துணை தலைவர் டாக்டர் தகி வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சபீக் அகமது பட்டதாரி அணி மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் டேனியல் சக்கரவர்த்தி ஏழுமலையான் ராஜேந்திரன் பாபு திம்மராயன் அமாவாசை அஜிஸ்வுல்லா இர்பான் பாபு திம்மராயன் வசிம் இம்ரான் அன்வர் துறைசாமி நடேசன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் முபாரக் அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மத்திய அரசை கண்டித்தும்,பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பர்கூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT