தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் புதிதாக 8110 பேருக்கு கரோனா தொற்று

10th Jun 2021 04:50 PM

ADVERTISEMENT

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,110 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,87,883 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 12,981 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 67 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 16,77,063 பேர் குணமடைந்துள்ளனர். 11,763 பேர் பலியாகியுள்ளனர்.

ADVERTISEMENT

 இன்றைய நிலவரப்படி 99,057 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT