தற்போதைய செய்திகள்

அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து: தமிழ்நாடு அரசு

DIN

அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும் பதியப்பட்டிருந்த அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பதியப்பட்ட 130 வழக்குகள் ரத்தாகின்றன. 

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதாரணி, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பதியப்பட்ட அவதூறு வழக்குகளும், அதன் மீதான நடவடிக்கைகளும் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT