மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பஞ்சாபில் பாட்டியாலா நகரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
புகழ்பெற்ற மலையாளக் கவிஞரான அக்கிதம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீட விருதினைக் கேரளத்தில் பாலக்காட்டிலுள்ள குமாரநல்லூரிலுள்ள அவருடைய இல்லத்தில் வியாழக்கிழமை வழங்குகிறார் கேரள பண்பாட்டுத் துறை அமைச்சர் ஏ.கே. பாலன் (இடது).
ஸ்ரீநகரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் மத்திய கூடுதல் காவல்படை அலுவலர் கொல்லப்பட்ட பத்காம் மாவட்டம் கெய்சர்முல்லா பகுதிக்கு வந்த ராணுவ வீரர்கள்.
மெக்சிகோ சிடியில் மெக்சிகோ அதிபர் ஆம்லோவின் பதவி விலகலை வலியுறுத்திப் போராடிவரும் ஆர்ப்பாட்டக்காரர்களை நகரின் பிரதான சதுக்கமான ஸொகாலோவுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் காவல்துறையினர்.