தற்போதைய செய்திகள்

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வெளிநடப்பு

DIN

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை வருவாய் வட்டாட்சியரகத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் ராஜாத்தி தலைமையில், மேம்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும், நீதியரசர் முருகேசன் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும், வருவாய்த்துறை ஊழியர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மணப்பாறை வருவாய் வட்டாட்சியரகத்தில் பணியில் இருந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மருங்காபுரி வருவாய் வட்டாட்சியரகத்தில் வட்டார தலைவர் சாந்தகுமார் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பும், ஆர்ப்பாட்டமும் நடைப்பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT