கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்வட்டப் பகுதியில் மூன்றாம் கட்ட கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி புதன்கிழமை துவங்கியது.
முதுமலை உள்வட்ட பகுதியில் கேமரா பொறுத்தும் பணியாளர்கள்.
புலிகள் காப்பகத்தின் Core zone எனப்படும் உள்வட்ட பகுதியான கார்குடி, தெப்பக்காடு, முதுமலை, நெலாக்கோட்டை, மசினகுடி ஆகிய வனச் சரகங்களுக்கு உள்பட்ட வனப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டங்களை பதிவு செய்ய கேமராக்களை பொருத்தி பணியாளர்களே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.