தற்போதைய செய்திகள்

கடலூர் முகாமில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு

DIN


கடலூர்: கடலூரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் ஆய்வு செய்தார்.  

நிவர் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில்,  கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. புயலை எதிர்கொள்ளும் வகையில், மீட்புப் பணிக்காக மீட்பு குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நிகர் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் பல்நோக்கு தங்கும் முகாமில் உள்ள மக்களை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சந்தித்து ஏற்பாட்டு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 

உணவு, குடிநீர் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, கடலூர் ஒன்றியக்குழு தலைவர் தெய்வ.பக்கிரி, நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமரன், நகராட்சி ஆணையர் எஸ்.ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT