செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 1500 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் தாக்கத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகின்றது. இதனால், இன்று நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
தற்போது ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,400 கனஅடி வருவதால் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மேலும் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வினாடிக்கு 1500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.