நிவர் புயல் எதிரொலியாக மரக்காணத்தில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் நேரில் ஆய்வு செய்தார்.
நிவர் புயல் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மரக்காணம் பகுதியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ராபீன் கேஸ்ட்ரோ தலைமையில் 45 வீரர்கள் மீட்புப் பணிக்கு முகாமிட்டுள்ளனர் .
இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் மரக்காணத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
மீட்புப் பணிக்கான உபகரணங்கள் தயாராக உள்ளதா என்று கேட்டறிந்தார்.