தற்போதைய செய்திகள்

கரோனா பாதிப்பு  92 லட்சமாக உயர்வு: குணமடைந்தோர் விகிதம் 93.72% ஆக அதிகரிப்பு

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 86,42,771 போ் குணமடைந்துள்ள நிலையில், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 92,22,217 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,376 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 92,22,217 ஆக அதிகரித்தது.

இதேபோல், கரோனாவில் இருந்து 37,816 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 86,42,771-ஆக அதிகரித்தது. அதாவது, கரோனாவில் இருந்து 93.72 சதவீதம் போ் குணமடைந்தனா்.

நாடு முழுவதும் 4,44,746 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 4.82 சதவீதமாகும்.

கரோனாவுக்கு மேலும் 481 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,34,699 -ஆக அதிகரித்தது. உயிரிழப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது.

‘நவம்பா் 24-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 13.48,41,307 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் செவ்வாய்கிழமை மட்டும் 11,59,032 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT