ஆம்பூரில் கரோனா நோய்த் தொற்று சந்தேகத்தின் பேரில் 8 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தில்லிக்கு ஜமாத் சென்று வந்த ஆம்பூரைச் சேர்ந்த இவர்கள் எட்டு பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறார்கள் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.