சிறப்புச் செய்திகள்

போதைப் பொருளும் நடிகைகளும் - இறுகும் விசாரணை வளையம்

தத்து

ஹிந்தித் திரையுலகம் எப்போதுமே திரைக்குப் பின்னால் தாதாக்கள், தீவிரவாதம், ஆயுதங்கள், ஹவாலா, கடத்தல் என்று ஏதோவொன்றுடன் சம்பந்தப்பட்டுக் கிடக்கிறது - இப்போது போதைப் பொருள், சம்பந்தப்படுகிற பலரும் நடிகைகள்.

ஒரு நடிகரின் தற்கொலை தொடர்பான விசாரணை போதைப் பொருளைச் சுற்றிவந்து இப்போது எண்ணற்ற நடிகைகளைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது.

இப்போதும் முடிவு வரவில்லை என்பதுடன் இன்னமும் எத்தனை பேர் இந்த வலைக்குள் வந்து சிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்துக்கு நடிகைகள் வரிசையாக நடந்து, அல்ல, ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடர் ஓட்டம் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் ஹிந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தோழி எனக் கூறப்படும் நடிகை ரியா சக்ரவர்த்தியிடம் தொடங்கியது, இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தன்னுடைய வீட்டில் அதிகாரிகள் கைப்பற்றிய போதைப் பொருள் நடிகை ரியா சக்ரவா்த்திக்கு சொந்தமானது என்றும் விரைவில் வந்து எடுத்துச் செல்வதாகத் தெரிவித்திருந்தார் என்றும் விசாரணையில் தெரிவித்திருக்கிறார் நடிகை ரகுல் பிரீத் சிங்.

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில், அவருடைய தோழி - நடிகை ரியா சக்ரவா்த்தி உள்பட பலர் மீது மும்பை காவல்துறை வழக்குப் பதிய, சிபிஐ விசாரித்து வருகிறது.

ரியாவின் கட்செவி அஞ்சல் உரையாடல் மூலம் அவருடைய போதைப் பொருள் கும்பல் தொடா்புகள் தெரியவர, போதைப்பொருள் தடுப்புத் துறை விசாரணையைத் தொடங்கி நடிகை ரியா, அவர் சகோதரா் ஷோவிக் சக்ரவா்த்தி உள்பட 15 பேரை கைது செய்துள்ளது.

நடிகைகள் ஒவ்வொருவராக நடந்துகொண்டிருக்கிறார்கள் போதைப் பொருள் தடுப்புத் துறை அலுவலகத்துக்கு, விசாரணைக்காக.

மும்பையில் சனிக்கிழமை விசாரணைக்காக வந்த ஹிந்தி நடிகை தீபிகா படுகோன்.

மும்பையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்த ஹிந்தி நடிகை சாரா அலிகான்.

விசாரணைக்காக சனிக்கிழமை மும்பையில் போதைப் பொருள் தடுப்பு அலுவலகம் வரும் ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூர்.

விசாரணைக்குப் பின் வெள்ளிக்கிழமை திரும்பிச் செல்லும் ஹிந்தி நடிகை ரகுல் பிரீத் சிங்.

நடிகைகளை வளைக்கும் விசாரணையின் தொடக்கப் புள்ளியான சுசாந்தின் தோழியும்  காதலியுமான நடிகை ரியா சக்ரவர்த்தி, செப். 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டபோது.

மும்பையில் வியாழக்கிழமை விசாரணைக்குப் பின் வெளியேறிச் செல்லும் தொலைக்காட்சி நடிகை அபிகைல் பாண்டே.

மும்பைக்கு சம்பந்தமில்லை. பெங்களூருவில் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்கொன்றில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை சஞ்சனா கல்ரானி.

ஆமாம், அனைவருமே நடிகைகளாகவே இருக்கிறார்களே, நடிகைகளுக்கும் போதைக்கும் அப்படியென்ன தொடர்பு? போதைப் பொருள்களுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு, எப்படித் தொடர்பு, இன்னும் யார்யாரெல்லாம் இந்த வரிசையில் வரக் காத்திருக்கிறார்கள், விசாரணை முடிவில்தான் வெளியே வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT