வைகோ ராஜ்ய சபா எம்பி ஆவது சரியா? தவறா?!

ஆனால் இந்திய இறையாண்மை என்பது எதன் மீது கட்டமைக்கப்படுகிறது? என்பதில் மக்களிடையே பலருக்கும் குழப்பம் இருப்பதால் வைகோ ராஜ்ய சபா எம்பி ஆவதற்கு சட்டபடியாகவும் சரி, தார்மீக ரீதியாகவும் சரி இப்போதைக்கு தடை
வைகோ ராஜ்ய சபா எம்பி ஆவது சரியா? தவறா?!

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேற்படி தேசத் துரோக வழக்கு பற்றிய விவரங்களை இப்போது காண்போம்.

கட்டுரையை காணொலியாகக் காண விரும்புவோருக்காக...

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதை அவரே வெளிப்படையாக அறிவித்து வருபவர். இதையொட்டி பொடா வழக்கிலும் கைதாகி சிறை சென்றவர். கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அருகே உள்ள ராணி சீதை மன்றத்தில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும் பேசியதாக கூறி வைகோ மீது இந்திய தண்டனை சட்டத்தில் தேசதுரோக குற்றம் (124 ஏ) மற்றும் இரு பிரிவினரிடையே விரோதத்தைத் தூண்டும் செயல்பாடு (153ஏ) ஆகிய பிரிவுகளில் வைகோ மீது ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ புத்தக வெளியீட்டு விழா பேச்சு தொடர்பாக எழும்பூர் நீதிமன்ற வழக்கில் 8 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் தானே சரணடைவதாக கூறி, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார் வைகோ. பிறகு 52 நாட்கள் கழித்து மே 25ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார்.

பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ- கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றபட்டது.

பின்னர், அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக ஜூன் 19ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார்.

அந்த வழக்கில் ஜூலை 5 காலை தீர்ப்பளித்த நீதிபதி, வைகோவுக்கு எதிரான குற்றசாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளி என அறிவிப்பதாக தீர்ப்பளித்தார். மேலும் இந்த குற்றத்திற்காக 1 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது. தற்போது திமுக அணியில் இணைந்து, இந்த மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி. ஆகும் முடிவில் இருக்கிறார் வைகோ. அவருக்கு ஒரு இடத்தை திமுக ஒதுக்கிக் கொடுத்துவிட்டது. இந்த நிலையில் இந்தத் தீர்ப்பு மதிமுக.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றிருப்பவர்கள், தேர்தலில் நிற்கத் தடை இருக்கிறது. அந்த அடிப்படையில் வைகோ, எம்.பி. ஆவதற்கு இந்த தண்டனை சிக்கலை உருவாக்கும் என தெரிகிறது. அதேசமயம் தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், தேர்தலில் நிற்க தடையில்லை என்கிற கருத்துகளும் வருகின்றன.

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அவர் அப்பீல் செய்ய வசதியாகத்தானே தவிர, எம்.பி. ஆக அல்ல என்றும் ஒருசாரார் கருத்து கூறுகிறார்கள். இதில் ஒரு தெளிவான பதில் கிடைப்பதைப் பொறுத்தே வைகோ எம்.பி. ஆக முடியும் என ஒரு சாரார் கருதுகிறார்கள்.

இதைப் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துறைசார் பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.

சிலர் இதை கருத்துரிமைக்கும், ஜனநாயகத்துக்குமான உரிமை பறிப்பு என்று கூறியுள்ளனர். மேலும் சிலர், இந்திய இறையாண்மையைக் காப்பேன் என்று சொல்லி இந்தியச் சட்டங்களை உருவாக்கக்கூடிய தகுதி கொண்ட ஒரு பொறுப்பை வகிக்கவிருக்கும் நபர், வேட்புமனுத்தாக்கலின் போதே அதை மதிக்காமல் வன்முறையைத் தூண்டிய குற்றத்திற்கு ஆளாகி அதில் தண்டனையும் பெற்றவர் என்பது தார்மீக அடிப்படையில் முற்றிலும் தவறான முன்னுதாரணம் என்று கருத்துக் கூறியுள்ளனர். இதில் வைகோ பேசிய எந்த விஷயம் 

இறுதியாகச் சொல்வதென்றால் வைகோ எம் பி யாவதற்கு சட்ட ரீதியாக எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், இதற்கு முன்பே ஒரு வழக்கில் விடுதலைப்புலிகள் அதாவது தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஒரு ஈழத்தமிழ் இனத்தைக் காப்பதற்காக உருவான ஒரு இயக்கம் மற்றும் அவர்களுக்கான உரிமைகள் குறித்துப் பேசுவது என்பது தேச விரோதம் ஆகாது என உச்சநீதிமன்றம் வைகோவுக்கு தீர்ப்பளித்துள்ள நிலையில் இன்று இந்த வழக்கில் வைகோ மீது வைக்கப்படும் குற்றச்சாட்டும் விதிக்கப்பட்ட தண்டனையும் கூட அரசியல் சந்தர்பவாதத்தை முன்னிட்டே தவிர அதில் வேறு எவ்வித நியாயமான நோக்கங்களும் இருப்பதாகத் தெரியவில்லை என தார்மீக ரீதியாக இந்த குற்றச்சாட்டை வலுப்படுத்தும் முயற்சியில் இருப்பவர்களுக்கும் பதில் அளித்துள்ளனர் சிலர்.

இதைப் பற்றி வைகோ என்ன சொல்லியிருக்கிறார் என்றால்?

சுதந்திரத்துக்கு முன்பு மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர் ஆகியோருக்கு மட்டுமே இந்த பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. திலகர் பர்மா சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திரத்துக்கு பின் இந்த சட்டத்தை நீக்கும்படி ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட இந்த சட்டம் இந்தியாவுக்கு தேவையற்றது என்று தெரிவித்தனர். அதன் பிறகும் கூட 194 (ஏ) என்ற இந்த சட்டம் நீக்கப்படவில்லை ஆனால் இந்தியாவில் இன்று வரை இந்த சட்டத்தின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லை.

பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனையெல்லாம் உணர்ந்து எனக்கு தண்டனை கிடைக்காது என நம்பினேன்.

இந்தியாவில் பொடோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் எம்.பி. நான்தான். அதே போல் தேச துரோக வழக்கிலும் தண்டிக்கப்பட்டவன் நான தான். இந்தியாவில் மகாத்மா காந்தி உருவத்தை செய்து அதனை சுடுபவர்களும், நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைப்பவர்களும் தேச பக்தர்கள் போல சித்தரிக்கப்படுகின்றனர். 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(1)-ன் படி பெண்களை கேலி செய்தல், மத பிரச்சினையை தூண்டுதல், 8(2)-ன் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அதே போல் 8(3)-ன்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. என்று வைகோ தெரிவித்திருந்தார்.

ஆக மொத்தத்தில் வைகோ அன்று பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று தான் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

ஆனால் இந்திய இறையாண்மை என்பது எதன் மீது கட்டமைக்கப்படுகிறது? என்பதில் மக்களிடையே பலருக்கும் குழப்பம் இருப்பதால் வைகோ ராஜ்ய சபா எம்பி ஆவதற்கு சட்டபடியாகவும் சரி, தார்மீக ரீதியாகவும் சரி இப்போதைக்கு தடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்களில் பல்வேறு தரப்பினரும் கூட ராஜ்ய சபாவில் தமிழகப் பிரச்னைகள் குறித்துப் பேச வைகோ போன்ற பேச்சுத்திறன் வாய்ந்த, செயல்திறன் மிகுந்த தலைவர் அவசியம் என்ற கருத்து கொண்டவர்களாகவே இருந்து வருவது உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com