தற்போதைய செய்திகள்

அதிராம்பட்டினத்தில் திடீரென 200 மீ உள்வாங்கிய கடல்

DIN

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் புதன்கிழமை திடீரென 200மீட்டர் தூரம் கடல் உள்வாங்கியது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்  கடற்பகுதியில்  கடந்த சில நாட்களாக அதிவேக சூறை காற்று வீசி வந்தது. இதனால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு மீன்பிடிக்க முடியாமல் பாதியிலேயே கரை திரும்பி விட்டனர்.

இந்நிலையில் புதன்கிழமை  காற்று குறைவாக இருந்ததால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏரிப்புறக்கரை கிராம மீனவர்கள் கடலுக்கு சென்று பார்த்தபொழுது கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியிருந்தது.  

மேலும் துறைமுக வாய்க்காலில் எந்த நேரமும்  தண்ணீர் நிரம்பி இருக்கும் நிலையில்  தண்ணீரே இல்லாமல் இருந்தது. இதையடுத்து மீீீீனவர்கள் வேறு வழியின்றி   தரை தட்டிய படகை நீண்ட தூரம் இழுத்துச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீண்டும் மீன்பிடித்து விட்டுதிரும்பும் பொழுது இதே நிலையில் கடல் உள்வாங்கி இருந்ததால் மிகுந்த தாமதத்திற்குப் பின்னர் மீனவர்கள் கரை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

தேர்தல் பணியில் ஒப்பந்தப் பணியாளர்கள்? மார்க்சிஸ்ட் புகார்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT