விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசிக பொருளாளர் முகமது யூசுப்புக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட சக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.