திரைப்படம், சின்னத்திரை படப்படிப்புகள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், படப்பிடிப்புகளுக்கு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில்,
தொடர்ச்சியாக திரைத்துறை கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மே 31ஆம் தேதி வரை சின்னத்திரை படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.