அரபிக் கடலில் மே 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,
தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் மே 14-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மே 14, 15ஆம் தேதிகளில் சூறாவாளி காற்று வீசக்கூடும்.