தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 25 ஆயிரத்தை நெருங்கும் கரோனா

6th May 2021 06:36 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 24,898 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 12,97,500 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 6,678 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 195 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 14,974 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் 21,546 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11,51,058
பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,31,468 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 1,34,141 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT