தற்போதைய செய்திகள்

தில்லியில் மேலும் 19,133 பேருக்கு கரோனா

6th May 2021 03:13 PM

ADVERTISEMENT

தில்லியில் புதிதாக 19,133 பேருக்கு இன்று(வியாழக்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 19,133 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 12,73,035 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 335 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 18,398 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 20,028 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளதை அடுத்து மொத்தம் 11,64,008 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

ADVERTISEMENT

நோய் பாதித்த 90,629 பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT