தமிழகத்தில் புதிதாக 1,971 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,75,190ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 739, செங்கல்பட்டில் 205, கோவையில் 173, தஞ்சையில் 111, திருவள்ளூரில் 107 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,650ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,51,222 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 11,318 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று 84,676 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.